X
X

Fact Check: இந்தியா 6 போர் விமானங்களையும் 250 வீரர்களையும் இழந்ததாக ராணுவத் தலைவர் கூறும் வைரலான வீடியோ ஒரு டீப் ஃபேக் ஆகும்.

ஐஐடி மெட்ராஸில் ஆற்றிய உரையின் போது ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, ஆபரேஷன் சிந்தூரின் பல்வேறு அம்சங்களைப் பற்றிப் பேசியதோடு, அது தொடர்பான விவரங்களையும் பகிர்ந்து கொண்டார்.

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்). ஐஐடி மெட்ராஸில் ஆற்றிய உரையின் போது ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, ஆபரேஷன் சிந்தூரின் பல்வேறு அம்சங்களைப் பற்றிப் பேசியதோடு, அது தொடர்பான விவரங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வு குறித்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது இந்திய ராணுவம் ஆறு போர் விமானங்களையும் 250 வீரர்களையும் இழந்ததாக அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் கூற்றுடன் ஒரு வீடியோ க்ளிப் பகிரப்பட்டு வருகிறது.

விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில், இது ஒரு டீப் ஃபேக் எனப்படும் போலி என்பதை, அது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்தது. “நாங்கள் ஆறு போர் விமானங்களை இழந்தோம், எங்கள் 250 வீரர்கள் கொல்லப்பட்டனர்” என்ற போலி அறிக்கை இராணுவத் தலைவரின் குரலை ஒத்த ஒரு ஆடியோ குளோன் மூலம் காட்சிகளில் செருகப்பட்டிருக்கிறது.

வைரல் ஆவது என்ன?

சமூக ஊடக பயனர் ‘ஈராம் தார்’ , “ப்ரேக்கிங்: பாகிஸ்தானுக்கு எதிரான போரில் 6 ஜெட் விமானங்களையும் 250 வீரர்களையும் இழந்ததை இந்திய ராணுவத் தலைவர் ஒப்புக்கொள்கிறார்.” என்ற தலைப்புடன் வைரலான வீடியோ  கிளிப்பைப் பகிர்ந்துள்ளார்.

பல்வேறு சமூக ஊடக தளங்களில் உள்ள பல பயனர்கள் இதே போன்ற கூற்றுகளுடன் இந்த காணொளியைப் பகிர்ந்துள்ளனர்.

விசாரணை

40 வினாடிகள் கொண்ட வைரலான வீடியோ கிளிப்பில், ஜெனரல் திவேதி,
“நான்-கைனடிக் பிரிவு என்பது நீங்கள் இன்று தொடங்கக்கூடிய ஒன்று, அடுத்த போர், அதைப் பற்றி நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அதற்கேற்ப நாம் தயாராக வேண்டும், ஏற்கனவே டைரக்டர் கூறியது போல், இதில் நாம் ஒன்றாகப் போராட வேண்டும்.” என்று கூறுவதைக் கேட்க முடிகிறது.

பின்னர் அவர், “இந்த நான்-கைனடிக் தன்மையை ஒன்றாக எதிர்த்துப் போராட வேண்டும். எங்களிடம் ஏற்கனவே ஆறு ஜெட் விமானங்களும் 250 வீரர்களும் உள்ளனர், ஆனால் நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம்… நாங்கள் கற்றுக்கொள்வோம்” என்று கூறுவதாகக் கூறப்படுகிறது. 

(“நாங்கள் ஆறு போர் விமானங்களை இழந்தோம், எங்கள் 250 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் நாங்கள் கைவிட மாட்டோம், நாங்கள் தொடர்ந்து கற்றுக்கொள்வோம்.”)

வைரலாகும் இந்த காணொளியில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் லோகோ தெரியும், அதில் ADGPI ஆதாரமாக ஆகஸ்ட் 4, 2025 தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ‘ADGPI-INDIAN ARMY’ இன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஜெனரல் திவேதியின் உரையின் அசல் கிளிப்பை நாங்கள் தேடி கண்டுபிடித்தோம். இங்கே வழங்கப்பட்ட தகவலின்படி, இந்த காணொளி ஆகஸ்ட் 9, 2025 அன்று ஐஐடி மெட்ராஸில் அவர் ‘ஆபரேஷன் சிந்தூர் ‘ பற்றி பேசிய உரையிலிருந்து எடுக்கப்பட்டது.

முழுவதாக 48 நிமிடம், 55 வினாடிகள் கொண்ட இந்த முழு காணொளியில், 10.57 இல் தொடங்கும் பகுதி வைரல் வீடியோ கிளிப்பின் அசல் மூலமாகும், அதில் அவர் கூறுகிறார், “நான்-கைனடிக் குவாட்ரன்ட் என்பது இன்று நீங்கள் தொடங்கக்கூடிய ஒன்று, அடுத்த போர் விரைவில் நடக்கக்கூடும், அது குறித்து  நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இயக்குனர் ஏற்கனவே வெளிப்படுத்தியபடி, இந்தப் போரில் நாம் ஒன்றாகப் போராட வேண்டும் என்று அதற்கேற்ப நாம் தயாராக வேண்டும்.”

பின்னர் அவர் பின்வருமாறு கூறுகிறார், “… இந்த நான்கைனடிக் தன்மையை ஒன்றாக எதிர்த்துப் போராட வேண்டும். எனவே, எத்தகைய முடிவுகளை எடுக்கலாம் என்பதற்கு, முழு தேசத்தின் அணுகுமுறையைப் பொறுத்தவரை, அடுத்த போருக்கு நாம் இருப்போம், போராடுவது இராணுவம் மட்டும் என்று கிடையாது. இந்த விஷயத்தில், கிரே ஜோனைப் பொறுத்தவரை, அது எப்போதும் இருக்கும், அவ்விதமே இருக்கும் என்பதை நான் உங்களுக்கு மிகத் தெளிவாக உறுதியளிக்கிறேன். மல்ட்டி-டொமைன் சைபர், அறிவாற்றல் மற்றும் ஸ்பேசைப் பொறுத்தவரை, இவை எல்லாம் தான் உங்களிடமிருந்து நாங்கள் மேலும் கற்றுக்கொள்ள வேண்டிய புதிய சொற்களாக உள்ளன. நாங்கள் என்ன விரும்புகிறோம், எதை எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்ல முடியும், ஆனால் எப்படி, எப்போது, ஏன் என்பனவற்றை குறித்து நீங்கள் எங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். ”

அவர் மேலும் பின்வருமாறு கூறியுள்ளார், “நான்-கைனடிக் பிரிவு என்பது இன்று நீங்கள் தொடங்கக்கூடிய ஒன்று, அடுத்த போர், அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம், விரைவில் நடக்கலாம், அதற்கேற்ப நாம் தயாராக வேண்டும், ஏற்கனவே டைரக்டரால் இந்த போரில் நாம் ஒன்றாக போராட வேண்டும் என்று கூறப்பட்டது.” அதில் “எங்களிடம் ஏற்கனவே ஆறு ஜெட் விமானங்களும் 250 வீரர்களும் உள்ளனர், ஆனால் நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம்… நாங்கள் கற்றுக்கொள்வோம். எங்களுக்கு சில தீர்மானங்கள் உள்ளன.” (“நாங்கள் ஆறு போர் விமானங்களை இழந்தோம், எங்கள் 250 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் நாங்கள் கைவிட மாட்டோம், நாங்கள் தொடர்ந்து கற்றுக்கொள்வோம்.”) என்று கூறப்படவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூர் ‘ நடவடிக்கையின் போது போர் விமானங்களை இழந்ததையோ அல்லது 250 வீரர்கள் கொல்லப்பட்டதையோ ராணுவத் தலைவர் ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிடப்படவில்லை.

பின்னர் பஃபல்லோ பல்கலைக்கழகத்தின் டீப்ஃபேக்-ஓ-மீட்டரைப் பயன்படுத்தி வைரல் கிளிப்பில் ஏஐ கையாளுதலுக்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் சோதித்தோம், மேலும் கிட்டத்தட்ட அனைத்து குறிகாட்டிகளும் ஏஐ கையாளுதலுக்கான அதிக சாத்தியத்தை சுட்டிக்காட்டின.

AVSRDD (2025) கண்டுபிடிப்பாளர்களின் பகுப்பாய்வு அறிக்கை, காணொளி ஏஐ-யால் உருவாக்கப்பட்டது என்பதை 100% உறுதியுடன் உறுதிப்படுத்தியுள்ளது.

LSDA (2024) பகுப்பாய்வு, வீடியோவில் சுமார் 70% ஏஐ -உருவாக்கம் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதேபோல், TALL (2023) டிடெக்டரும் சுமார் 70% ஏஐ உள்ளடக்கத்தை காட்டியது. WAV2LIP-STA (2022) டிடெக்டர், வீடியோ ஏஐ-உருவாக்கமாக இருப்பதற்கான 94% சாத்தியத்தைக் குறிக்கிறது, அதே நேரத்தில் DSP-FWA (2019) சுமார் 70% ஏஐ- கையாளுதலை உறுதிப்படுத்துகிறது.

கூடுதலாக, XCLIP (2022) குறிகாட்டிகள் ஏஐ கையாளுதலின் கிட்டத்தட்ட 100% சாத்தியத்தை உறுதிப்படுத்துகின்றன.

மேலும் சரிபார்ப்புக்காக, எங்கள் கூட்டாளியான MCA-வின் முன்முயற்சியான டீப்ஃபேக் அனாலிசிஸ் யூனிட்(DAU)-ஐத் தொடர்பு கொண்டோம். DAU குழு பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி வீடியோவை பகுப்பாய்வு செய்தது, இது ஏஐ-உருவாக்கமாக இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தியது.

மேலும், ஹைவ் ஏஐ ஆடியோ கிளாசிஃபையரின் பகுப்பாய்வு, வைரல் வீடியோவில் உள்ள 20-வினாடி ஆடியோ கிளிப் ஏஐ-ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியது.

வீடியோவில் ஏஐ கையாளுதலை ஹைவ் ஏஐ டீப்ஃபேக் டிடெக்டரும் உறுதிப்படுத்தியது.

கூடுதலாக, மத்திய அரசின் நோடல் தகவல் நிறுவனமான PIB, இந்த காணொளியில் கூறப்பட்ட கூற்றுக்களை மறுத்து, இது போலியானது என்று கூறியுள்ளது.

போலி கூற்றுடன் வைரல் காணொளியைப் பகிர்ந்த பயனரின் சுயவிவரம் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தால் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ‘ஆபரேஷன் சிந்தூர் ‘ தொடர்பான பிற வைரல் கூற்றுகள் குறித்த உண்மைச் சரிபார்ப்பு அறிக்கையை இங்கே படிக்கலாம்.

முடிவு: ‘ஆபரேஷன் சிந்தூர் ‘ நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையின் போது ஆறு இந்திய விமானங்கள் இழந்ததையும் 250 வீரர்கள் கொல்லப்பட்டதையும் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் வைரல் காணொளி போலியானது, மேலும் இது ஒரு போலி அறிக்கையைச் செருக ஏஐ-ஐப் பயன்படுத்தி கையாளப்பட்டுள்ளது.

  • Claim Review : இந்திய ராணுவத் தலைவர் கூறுகையில், இந்தியா உள்நாட்டில் 6 போர் விமானங்களையும் 250 வீரர்களையும் இழந்தது.
  • Claimed By : FB பயனர் இராம் தார்
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later