
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தலைநகர் தில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து, ஆர்டிகிள் 370, 35 A மீண்டும் அமல்படுத்தக் கோரும் பதாகை கொண்ட சிலரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காஷ்மீருக்கு ஆதரவாக விவசாயிகளும் போராடுகின்றனர் என்ற கூற்றுடன் இது பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த வைரல் கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது. இந்த வைரல் புகைப்படம் பழையது மற்றும் இது விவசாயிகளின் போராட்டத்துடன் தொடர்புடையது அல்ல என்பதே உண்மை.
கூற்று
பேஸ்புக் பயனரான ரஜினி சிவ்குமார், “பஞ்சாப் விவசாயிகளுக்கும் காஷ்மீர் 370 & 35A சட்டத்திற்க்கும் என்னடா சம்பந்தம்?? ….” என்று எழுதியுள்ளார். இந்த பேஸ்புக் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
மற்றொரு பேஸ்புக் பயனரான மருத்துவர் அபிலாஷா திவேதி என்பவர் நவம்பர் 30 அன்று ஒரு புகைப்படத்தை பதிவேற்றி, “அருமை…. விவசாயிகள் போராட்டத்தில் ஆர்டிகிள் 370, 35 A… ” என்று எழுதியுள்ளார்.
விசாரணை
ஆர்டிகிள் 370, 35A மீண்டும் அமல்படுத்த கோரும் பதாகைகளை சில நபர்கள் பிடித்திருப்பதை, இந்த வைரல் புகைப்படத்தில் நம்மால் காண முடிகிறது. இது குறித்து விசாரிக்க, கூகுள் தலைகீழ் படக் கருவியைப் பயன்படுத்தி இணையத்தில் தேடியதில், இந்த புகைப்படம் பேஸ்புக் பக்கமான ஷிரோமணி அகாலி தளத்தில் 8 ஆகஸ்ட் 2019 அன்று பதிவேற்றப்பட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
வேளாண் மசோதாவுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் சமீபத்தில் தான் தொடங்கியுள்ள நிலையில், இந்த புகைப்படம் எந்தவொரு சமீபத்திய நிகழ்விலிருந்தும் எடுக்கப்படவில்லை என்பதை அதன் பதிவேற்றப்பட்ட தேதி நமக்குத் தெளிவுபடுத்தியது.
இந்த கூற்றினை சரிபார்க்க, டைனிக் ஜாக்ரானின் அமிர்தசரஸ் நிருபர் நிதின் திமானை நாங்கள் தொடர்பு கொண்டோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், “ இந்த வைரல் புகைப்படத்திற்கும், சமீபத்திய விவசாயிகளின் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த புகைப்படம் பழையது. 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவுகளை மீண்டும் அமல்படுத்தக் கோரி ஷிரோமணி அகாலிதளம் 2019 இல் எதிர்ப்பு தெரிவித்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது,” என்று கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் டெல்லியில் வசிப்பதும், பேஸ்புக்கில் அவருக்கு ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இந்த பழைய புகைப்படம், சமீபத்திய விவசாயிகளின் போராட்டத்தின்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டு வைரலாகியுள்ளது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.