
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). தாஜ்மஹாலை நியூயார்க்கின் பிளாசா ஹோட்டலுக்கு 99 ஆண்டுகளுக்கு ஒத்திக்கு விடுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வைரல் பதிவு கூறுகிறது. மேலும் தாஜ்மஹாலில் தற்போது திருமணங்கள் மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளை நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த இடுகை கூறுகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத்துறையின் இயக்குநர் ஜெனரல் இந்த கூற்றுக்களை மறுத்துள்ளார்.
கூற்று
தமிழ் மொழியில் இயங்கிவரும் செய்தி தொலைக்காட்சியான புதிய தலைமுறையின் பெயரில் பகிரப்படும் ஒரு புகைப்படம், “உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் 99 ஆண்டுகளுக்கு தி பிளாசா என்ற நியூயார்க் ஹோட்டலுக்கு ஒத்திக்கு விடப்படும், சினிமா படப்பிடிப்பு, திருமணங்கள் நடத்தவும் அனுமதி,” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததாகக் கூறுகிறது.
விசாரணை
2021-22 பட்ஜெட்டின் மூலம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய இந்தியா குறித்த பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு வழங்கினார். கொரோனா தொற்றுநோய் தந்த பெருந்தாக்கத்தில் இருந்து இன்னும் நாம் முழுமையாக மீளாத இந்தப் பொழுதில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தப் பட்ஜெட்டில் (யூனியன் பட்ஜெட் 2021), சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்வதன் மூலம் வேலைவாய்ப்பு பெருக்கம் செய்வது குறித்து நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளதாக டைனிக் ஜாக்ரானில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரை கூறுகிறது.
இது குறித்து விசாரிக்க, அதிகாரப்பூர்வ யூனியன் பட்ஜெட் இணையதளத்தில் இது குறித்த தகவல்களைத் தேடியதில், பட்ஜெட் உரை குறித்த ஆவணத்தை எங்களால் காண முடிந்தது. இருப்பினும் வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் மின்னஞ்சல் வழியாக நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் பத்திரிகை மற்றும் தகவல் பிரிவு இயக்குநர் ஜெனரல் (மீடியா மற்றும் கம்யூனிகேஷன்ஸ்) ராஜேஷ் மல்ஹோத்ராவை தொடர்பு கொண்டதில், “இது முற்றிலும் தவறானது,” என்று அவர் பதிலளித்தார்.
இது குறித்து விசாரிக்க புதிய தலைமுறையின் இணைய குழுவின் தலைவர் மனோஜ் பிரபாகரை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்களின் தொலைக்காட்சி இத்தகைய செய்தியினை வெளியிடவில்லை என்றும், இந்தப் புகைப்படம் திருத்தப்பட்டுள்ளதாகவும் கூறி அவர் இந்த கூற்றுக்களை மறுத்துவிட்டார்.
निष्कर्ष: இந்த வைரல் கூற்று தவறானது. இதுபோன்ற எந்த அறிவிப்பினையும் நிதியமைச்சர் வெளியிடவில்லை.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.