உண்மை சரிபார்ப்பு: ஊரடங்கு நிவாரண நிதியாக அரசு ₹ 7,500 வழங்கவில்லை, இந்த வைரல் கூற்று தவறானது
இந்த வைரல் கூற்று தவறானது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஊரடங்கு நிவாரண நிதியாக அரசு ₹ 7,500 வழங்கவில்லை.
- By Vishvas News
- Updated: September 23, 2020

புது தில்லி (விஸ்வாஸ் குழு).ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ₹ 7,500 இலவச நிவாரண நிதியை அரசாங்கம் வழங்குவதாகக் கூறும் ஒரு பதிவு, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நிதியைப் பெறுவதற்கான இணைப்போடு பகிரப்படும் இந்த இடுகை, விஸ்வாஸ் வாட்ஸ்அப் சாட்பாட் (+91 95992 99372) மூலமாக உண்மை சரிபார்ப்புக்காக நம்மை வந்தடைந்தது.
இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்பதும், இந்தக் கூற்றில் கூறப்பட்டுள்ள படி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அரசு ₹7,500 வழங்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
கூற்று
பேஸ்புக் பயனர் சலீம் அல்தா முகமது சலீம், வாட்ஸ்அப் குரூப் லிங்க்ஸ் என்ற பக்கத்தில் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளார். அதில் “அரசாங்கம் இறுதியாக ஒப்புதல் அளித்து, ஒவ்வொரு குடிமகனுக்கும் ₹7,500 நிவாரண நிதியை இலவசமாக வழங்கத் தொடங்கியுள்ளது. நான் பெற்றதைப் போலவே உடனடியாக நீங்களும் உங்களுடைய நிதியை எவ்வாறு பெறுவது என்பதை கீழே அறிந்து கொள்ளவும்.
https://funds4covid-19.com/.” என்று குறிப்படப்பட்டுள்ளது. அந்த இடுகையை இங்கே காணலாம்.
விசாரணை
இந்தக் கூற்று குறித்து இணையத்தில் தேடியதில், இதைப் பற்றிய எந்த அரசாங்க உத்தரவின் நகலையோ, அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையினையோ எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. மாறாக ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட சில ஊடக அறிக்கைகளை எங்களால் காண முடிந்தது. அதில் அனைத்து ஜன்தன் கணக்குகளுக்கும் அரசு ₹7,500 வழங்க வேண்டும் என்கிற காங்கிரஸின் கோரிக்கை குறித்து கூறப்பட்டிருந்தது. மேலும் மேகாலயா காவல்துறையின் வலைதளத்திலும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்று மேகாலயா காவல்துறையால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையையும் நம்மால் காண முடிந்தது.
அந்த இடுகையுடன் பகிரப்பட்ட https://funds4covid-19.com/ இணைப்பைக் கிளிக் செய்ததில், ₹7500 நிதியைப் பெற 7 வாட்ஸ்அப் குழுக்களில் இந்த செய்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டி, அதில் கேட்டிருப்பதைக் கண்டறிந்தோம்.

தாங்கள் பணத்தைப் பெற்றோம் என்பதை பலரும் உறுதிப்படுத்தும் பல கருத்துகளை இடுகையின் கீழ் நம்மால் காண முடிந்தது.
இதனை உறுதி செய்ய அதில் குறிப்பட்டப்படியே அந்த செய்தியை 7 வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்ததில், வலை இணைப்பு தகவல் iqbroker இன் புதிய உரையாடல் பெட்டி எங்கள் திரையில் தோன்றியது. இதன் மூலம் இந்த இணைப்பு இந்த வலைத்தளத்தின் விளம்பரத்திற்கானது என்பதையும், ₹ 7,500 பெறுவதற்காக அல்ல என்பதையும் எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.

கூற்றில் உள்ள இணைப்பின் நம்பகத்தன்மையை காண, இந்த வலைத்தளத்தை who.is தளத்தில் தேடியபோது, இந்த வலைப்பக்கம் 13 ஆகஸ்ட் 2020 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளதை நாங்கள் கண்டறிந்தோம். இருப்பினும், அது தொடர்பான பிற தகவல்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த இணைப்பை குறித்து மேலும் அறிந்து கொள்ள, சைபர் நிபுணர் ஆயுஷ் பரத்வாஜுக்கு இந்த இணைப்பினை அனுப்பினோம். இந்த இணைப்பு ஒரு வலைத்தளத்தை மேம்படுத்துவதற்கும், கிளிக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குமான வழி மட்டுமே என்று பரத்வாஜ் நம்மிடம் கூறினார். இந்த இணைப்பு எந்தவொரு அரசாங்க வலைத்தளத்துடனும் இணைக்கப்படாததால், இதில் பதிவு செய்வதன் மூலம் யாரும் அரசாங்கத்திடமிருந்து எந்த பணமும் பெற முடியாது என்றும் அவர் நமக்குத் தெளிவுபடுத்தினார்.
இந்த இடுகையைப் பகிர்ந்த பல பக்கங்களில் பேஸ்புக் பக்கமான வாட்ஸ்அப் குழு இணைப்புகள் பக்கமும் ஒன்று. அதனை ஆராய்ந்ததில், அப்பக்கம் 4,46,035 பின்தொடர்பவர்களைக் கொண்டது என்பது தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் கூற்று தவறானது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஊரடங்கு நிவாரண நிதியாக அரசு ₹ 7,500 வழங்கவில்லை.
- Claim Review : ஊரடங்கு நிவாரண நிதியாக அரசு ₹ 7,500 வழங்கத் தொடங்கியுள்ளது.
- Claimed By : பேஸ்புக் பயனர் சலீம் அல்தா முகமது சலீம்
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Email-Id contact@vishvasnews.com