உண்மை சரிபார்ப்பு: அனைத்து மாணவர்களுக்கும் அரசு ₹9,000 வழங்கவில்லை, இந்த வைரல் கூற்று தவறானது
இந்த வைரல் கூற்று தவறானது. அனைத்து மாணவர்களுக்கும் ₹9,000 வழங்கும் எந்தத் திட்டத்தையும் அரசு அறிவிக்கவில்லை.
- By Vishvas News
- Updated: September 21, 2020

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக பலர் பள்ளி கல்லூரிகளுக்கு கட்டணங்களை செலுத்த சிரமப்படுவதால், அனைத்து மாணவர்களுக்கும் அரசு ரூ .9,000 வழங்குவதாக கூறும் பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பணத்தினைப் பெறுவதற்கான இணைப்போடு உள்ள இடுகை சமூக ஊடகங்களில் அதிகமாய் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பதிவானது விஸ்வாஸ் வாட்ஸ்அப் சாட்போட் (+91 95992 99372) மூலம் உண்மை சரிபார்ப்புக்காக நம்மை வந்தடைந்தது.
இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது. இந்தக் கூற்றினைப் போல அரசாங்கம் மாணவர்களுக்கு ₹ 9,000 கொடுக்கவில்லை என்பதும், இதுபோன்ற இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் தனிப்பட்ட தரவு திருட்டு மற்றும் நிதி இழப்பு ஏற்படலாம் என்பதும் இந்த விசாரணையில் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிந்தது.
கூற்று
இந்த வைரல் இடுகையில், “கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக, மாணவர்கள் தங்கள் பள்ளி/கல்லூரி கட்டணங்களை சரியாக செலுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அரசு தனது திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் ₹9,000 பணத்தை இலவசமாக வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் அவர்கள் தங்கள் கட்டணங்களை எளிதாகச் செலுத்த உதவுவதோடு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் அதிக பலன் கிடைக்கும். உங்கள் ரூ .9000 இலவச தொகையைப் பெற இந்த இணைப்பிலிருக்கும் படிவத்தை நிரப்பவும். Bithttp: //bit.ly/Register-For-Free-Scholarship,” என்று குறிப்படப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனுக்காக இந்தச் செய்தியை முடிந்தவரை அதிகமாய் பகிருங்கள் என்ற கோரிக்கையுடன் இந்த இடுகை வைரலாகி வருகிறது. இந்த இடுகையை இங்கே காணலாம்.
விசாரணை
கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு அரசு ₹9,000 கொடுப்பது குறித்து கண்டறிய, இதைப் பற்றி இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், அத்தகைய அரசாங்க உதவியை உறுதிப்படுத்தும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் எங்களால் காண முடியவில்லை.
இடுகையில் வழங்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்ததில், அந்தப் படிவத்தில் பெயர், மொபைல் எண் மற்றும் முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களை நிரப்புமாறு கேட்கப்பட்டு இருந்தது. இந்தப் பணத்தினைப் பெறுவதற்கு மேலும், வாட்ஸ்அப்பில் குறைந்தது 10 பேருடன் அல்லது 10 குழுக்களுடன் இந்த இணைப்பைப் பகிருமாரும் அதில் கேட்கப்பட்டிருந்தது.

இதை வைத்தே அந்த இணைப்பு தெளிவற்றது என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.

இந்தக் கூற்றினைச் சரிபார்க்க விஸ்வாஸ் நியூஸ், உத்தரபிரதேசத்தின் தேசிய தகவல் மையத்தின் (என்.ஐ.சி) மூத்த தொழில்நுட்ப இயக்குநர் அலோக் திவாரியுடன் பேசினோம். இது குறித்து அவர் பேசுகையில் இதுபோன்ற இணைப்புகளை மக்கள் கிளிக் செய்ய வேண்டாம் என்று எச்சரித்தார். மேலும் “அரசாங்கம் ஏதேனும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டால், அந்த இணைப்புகள் gov.in அல்லது nic.in உடன் முடிவடையும். அவ்வாறு முடிவடையாத, பிற அங்கீகரிக்கப்படாத இணைப்புகளிலிருந்து மக்கள் விலகி இருப்பதே நல்லது. இந்த வைரல் செய்தியை எந்த அரசாங்க நிறுவனமும் வெளியிடவில்லை” என்றார்.
இந்த இணைப்பு பயனரின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதாக உள்ளது. இது போன்ற இணைப்புகள் சில சமயங்களில் நிதி இழப்புக்குக்கூட வழிவகுக்கலாம். நம் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் தேசிய சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்ட்டலில் ஆன்லைன் பாதுகாப்பு குறித்த குறிப்புகள் கிடைக்கின்றன. அதில் மின்னஞ்சல், செய்தி அல்லது சமூக ஊடகங்களில் தெரியாதவர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்யாமல் மக்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

निष्कर्ष: இந்த வைரல் கூற்று தவறானது. அனைத்து மாணவர்களுக்கும் ₹9,000 வழங்கும் எந்தத் திட்டத்தையும் அரசு அறிவிக்கவில்லை.
- Claim Review : கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக, மாணவர்கள் தங்கள் பள்ளி/கல்லூரி கட்டணங்களை சரியாக செலுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அரசு தனது திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் ₹9,000 பணத்தை இலவசமாக வழங்கி வருகிறது
- Claimed By : வாட்ஸ்அப் பயனர்
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Email-Id contact@vishvasnews.com