உண்மை சரிபார்ப்பு: நிர்பயா வழக்கின் வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா பற்றி தவறாக வழிநடத்தும் க்ளைம் வைரல் ஆகிறது.
விஷ்வாஸ் நியூஸ் செய்த புலன்விசாரணையில் இந்த வைரல் க்ளைம் பொய் என்று கண்டு பிடிக்கப்பட்டது. வைரல் பதிவில் க்ளைம் செய்திருப்பது போல், சீமா குஷ்வாஹா இது போன்ற எந்தப் பட்டியலிலும் இடம் பெறவில்லை. உண்மையில் அது போன்ற ஒரு பட்டியல் எந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தாலோ அமைப்பாலோ வெளியிடப்படவில்லை.
- By Vishvas News
- Updated: May 28, 2022

புது டில்லி (விஷ்வாஸ் நியூஸ்): உலகின் ஆறு முக்கிய திறன்வாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக க்ளைம் செய்து நிர்பயா வழக்கில் போராடிய சீமா குஷ்வாஹாவின் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது. விஷ்வாஸ் நியூசின் புலன்விசாரணையில் அந்த வைரல் க்ளைம் பொய் என்று அறியப் பட்டிருக்கிறது. சீமா சம்ரித்தி குஷ்வாஹா அது போன்ற எந்தப் பட்டியலிலும் சேர்க்கப்படவில்லை. உண்மையில், அது போன்ற ஒரு பட்டியல் எந்தப் புகழ் வாய்ந்த நிறுவனம் அல்லது அமைப்பினால் வெளியிடப்படவில்லை.
என்ன வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது?
ஃபேஸ்புக் பயனர் ஆவாஸ் பீகார் கி இந்த வைரல் பதிவைப் பகிர்ந்திருக்கிறது. “மனமார்ந்த வாழ்த்துக்கள். நிர்பயா கற்பழிப்பிள் பாதிக்கப்பட்டவரின் சட்ட அறிவுரைஞர் சீமா சம்ரித்தி குஷ்வாஹா உலகின் 6 முக்கிய திறன்வாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்” என்று அந்தக் க்ளைம் கூறுகிறது.
புலன் விசாரணை –
இந்த வைரல் க்ளைமின் உண்மை நிலையை அறிவதற்காக, நாங்கள் பல முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம், ஆனால் அந்த வைரல் க்ளைமுக்கு சம்பந்தப்பட்ட நம்பத்தகுந்த எந்த ஊடக அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் BBC, Time, மற்றும் Forbes போன்ற பல செய்தி வெளியீடுகள், மிக வலிமை வாய்ந்த பெண்கள், “வருடத்தின் 100 பெண்கள்”, பணக்கார நபர்கள், மிகவும் அழகான நபர்கள் போன்ற பட்டியல்களை பதிப்பிக்கின்றன. ஆனால் வைரல் பதிவில் கூறியிருப்பதைப் போன்ற பட்டியல் எந்தப் புகழ்வாய்ந்த நிறுவனத்தாலோ அமைப்பாலோ வெளியிடப்படவில்லை.
புலன்விசாரணையை மேலும் தொடர்ந்து நாங்கள் சீமா குஷ்வாஹாவின் சமூக ஊடகக் கணக்குகளை ஸ்கேன் செய்தோம், ஆனால் அங்கும் வைரல் க்ளைமுக்குத் தொடர்பான எந்தப் பதிவையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேல் விவரங்களுக்காக, நாங்கள் சீமா குஷ்வாஹாவுடன் தொடர்பு கொண்டோம். அவர் எங்களிடம் கூறினார், “சமீப காலத்தில் அது போன்ற பட்டம் ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை. ‘’அறிவுடன் கூடிய அழகு உலக விருதுகளும்’ மற்றும் ‘2021 ஆண்டுக்கான பெண்கள் மேம்பாட்டில் உன்னதம் சான்றிதழும் ‘ எனக்குக் கிடைத்தது. பெண்கள் மேம்பாட்டில் உன்னதம் என்பற்கான பட்டியலில் இரண்டாவது நிலையில் எனக்கு இடம் கிடைத்தது.
இந்தச் சான்றிதழ் www.republicofwomen.org-ஆல் எனக்கு அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணத்தினால் அந்த நிகழ்வு நேரடியாக நடக்கவில்லை. அதனால்தான் இந்த சான்றிதழ்கள் எனக்கு ஆன்லைன் அஞ்சல் மூலமாக அளிக்கப்பட்டன.”
அதன் புலன் விசாரணையின் கடைசிக் கட்டத்தில் விஷ்வாஸ் நியூஸ், இந்த வைரல் பதிவைப் பகிர்ந்த தற்குறிப்பு மீது ஒரு பின்புல சரிபார்ப்பு செய்தது. அந்தப் பயனரை 940 நபர்கள் தொடர்கிறார்கள் என்று நாங்கள் கண்டுபிடித்தோம். இந்தப் பக்கம் 23 மே மாதம் 2020-லிருந்து நடப்பில் உள்ளது.
निष्कर्ष: விஷ்வாஸ் நியூஸ் செய்த புலன்விசாரணையில் இந்த வைரல் க்ளைம் பொய் என்று கண்டு பிடிக்கப்பட்டது. வைரல் பதிவில் க்ளைம் செய்திருப்பது போல், சீமா குஷ்வாஹா இது போன்ற எந்தப் பட்டியலிலும் இடம் பெறவில்லை. உண்மையில் அது போன்ற ஒரு பட்டியல் எந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தாலோ அமைப்பாலோ வெளியிடப்படவில்லை.
- Claim Review : மனமார்ந்த வாழ்த்துக்கள். நிர்பயா கற்பழிப்பிள் பாதிக்கப்பட்டவரின் சட்ட அறிவுரைஞர் சீமா சம்ரித்தி குஷ்வாஹா உலகின் 6 முக்கிய திறன்வாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்”
- Claimed By : ஆவாஸ் பீகார் கி
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Telegram 9205270923
-
Email-Id contact@vishvasnews.com