
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). காயமடைந்த சிறுவன் ஒருவனை ஒரு பெண் தன் மடியில் கிடத்தியிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. அண்மையில் டெல்லியில் ரிங்கு சர்மா என்ற நபர் கொல்லப்பட்டதோடு இந்த படம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில் காணப்படும் பெண், அண்மையில் இறந்த இளைஞர் ரிங்கு ஷர்மாவின் தாய் என்று சமூக ஊடக பயனர்கள் கூறி வருகின்றனர்.
இது குறித்து விஸ்வாஸ் நியூஸ் விசாரித்தபோது, இந்த கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டது. இந்தப் புகைப்படத்தில் இருப்பது அனுராக் போடரின் தாயார். 2020 அக்டோபரில் பீகாரில் துர்கா பூஜையின் போது நடந்த மோதலில் அனுராக் என்ற சிறுவன் இறந்தான். அந்த புகைப்படமே சமீபத்தில் டெல்லியில் நடந்த சம்பவத்துடன் தொடர்புப்படுத்தப்பட்டு வைரலாகி வருகிறது.
கூற்று
நம் வாட்ஸ்அப் சாட்பாட் வழியாக (+91 9599299372) உண்மைச் சரிபார்ப்புக்காக இந்தக் கூற்றை நம்மிடையே வந்தடைந்தது. பயனர் ஒருவர் இந்த ட்வீட்டின் இணைப்பை நம்மோடு பகிர்ந்துகொண்டார். பிரகார் திரிபாதி என்ற ட்விட்டர் பயனர், “ஒரு தாயின் கண்ணீர்… தேசத்தின் ஆன்மா மீதான கடன் #JusticeForRinkuSharma” என்று எழுதி ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
பிப்ரவரி 10 ஆம் தேதி டெல்லியின் மங்கோல்பூரியில் ரிங்கு சர்மா என்ற நபர் கொல்லப்பட்டார். இந்த வழக்கை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு தற்போது விசாரித்து வருவதாக டைனிக் ஜாக்ரானின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்த வழக்கு சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி, வெவ்வேறு கூற்றுக்களுடன் பகிரப்பட்டு வருகிறது.
இது பற்றி விசாரிக்க நாங்கள் கூகுள் பின்னோக்கிய பட தேடல் கருவியைப் பயன்படுத்தி, இந்த வைரல் புகைப்படத்தைத் தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்தப் புகைப்படம் தொடர்பான பல செய்திகளை இணையத்தில் கண்டோம். இந்தப் புகைப்படத்துடன் தொடர்புடைய தேடலாக கூகுள் ‘முங்கர் அனுராக் போடார்’ என்பதைக் குறிப்பிட்டது.
அக்டோபர் 28, 2020 அன்று நியூஸ் ஜாங்கரி என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட காணொலியில் தம்ப்நெய்லாக இந்த புகைப்படம் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது. அந்த காணொலியில் தலைப்பில், “முங்கர் துர்காவில் கலவரத்தில் கொல்லப்பட்ட அனுராக்கும், அவரது தாயும்,” என்று கூறப்பட்டிருந்தது.
டெல்லியில் ரிங்கு சர்மா கொலை வழக்கு நடைபெறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்த புகைப்படம் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து நாங்கள் மேலும் விசாரித்ததில், 27 அக்டோபர் 2020 அன்று வெளியான டைனிக் ஜாக்ரானின் ஒரு அறிக்கை இணையதளத்தில் நமக்கு காணக் கிடைத்தது. முங்கரில் துர்கா சிலை கரைப்பு விழாவின்போது ஏற்பட்ட வன்முறை மோதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் அனுராக் என்ற சிறுவன் இறந்த சம்பவம் குறித்து அதில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில், வைரல் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள பெண்ணின் படத்தை மற்றொரு கோணத்தில் நம்மால் காண முடிகிறது.
இந்த வைரல் இடுகை குறித்து முங்கர் டைனிக் ஜாக்ரானின் பணியகத் தலைவர் பிரஷாந்த் பகிர்ந்து கொண்டோம். முங்கரில் துர்கா பூஜையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த அனுராக் என்ற சிறுவனின் தாயாரே இந்தப் புகைப்படத்தில் உள்ளார் என்பதை அவர் நமக்கு உறுதிப்படுத்தினார். ஜஸ்டிஸ் ஃபார் அனுராக் இயக்கத்தைச் சேர்ந்த முகேஷ் போத்தருடன் அவர் நம்மை தொடர்பில் இணைத்தார். அந்தப் பெண் அனுராக்கின் தாயார் என்று அவரும் கூறினார். மேலும் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த வைரல் கோரிக்கையை பகிர்ந்து கொண்ட ட்விட்டர் பயனர் பிரகர் திரிபாதியின் கணக்கினை ஆராய்ந்ததில், அவரது கணக்கு செப்டம்பர் 2020 இல் உருவாக்கப்பட்டது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இக்கட்டுரை எழுதப்படும் வரை அதற்கு 7 பின்தொடர்பவர்கள் இருந்தனர்.
निष्कर्ष: இந்த கூற்று தவறானது. இந்த புகைப்படத்தில் இருப்பது அனுராக் போடரின் தாயார். 2020 அக்டோபரில் பீகாரில் துர்கா பூஜையின் போது நடந்த மோதலில் அனுராக் என்ற சிறுவன் இறந்தான். அந்த புகைப்படமே சமீபத்தில் டெல்லியில் நடந்த சம்பவத்துடன் தொடர்புப்படுத்தப்பட்டு வைரலாகி வருகிறது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.