உண்மை சரிபார்ப்பு: மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பும் காணொலி JNUவில் எடுக்கப்பட்டதல்ல
இந்த வைரல் கூற்று தவறானது. பாகிஸ்தானுக்கு எதிராக மக்கள் முழக்கங்களை எழுப்பும் காணொலி 2018 இல் தானேவில் நடந்த விநாயகர் சிலைகள் கரைப்பு விழாவில் எடுக்கப்பட்டது.
- By Vishvas News
- Updated: November 24, 2020

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). காவிநிற கொடிகளுடன் மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பும் காணொலி ஒன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) எடுக்கப்பட்டதாக வைரலாகி உள்ளது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வைரல் காணொலி தானேவில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு விழாவின்போது எடுக்கப்பட்டதாகும்.
கூற்று
Save Hinduism என்ற பேஸ்புக் பக்கம், காவிநிற கொடி அசைத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மக்கள் முழக்கங்களை எழுப்பும் ஒரு வைரல் காணொலியை (காப்பக இணைப்பு) பகிர்ந்து, அந்தக் காணொலி JNUவில் எடுக்கப்பட்டதாகக் கூறுகிறது.
பல பயனர்களும் பல்வேறு சமூக வலைதளங்களில் இதே போன்ற கூற்றுடன் இந்த காணொலியைப் பகிர்ந்துள்ளனர்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, நாங்கள் முதலில் இந்த வைரல் காணொலியை இன்விட் கருவியில் பதிவேற்றி, அதன் கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்தோம். பின்பு கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி, அவற்றை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், லிம்ரா டைம்ஸ் யூடியூப் சேனலில் 4 அக்டோபர் 2018 அன்று இந்த காணொலி பதிவேற்றப்பட்டிருந்ததையும், இந்த காணொலி தானேவில் பாகிஸ்தானுக்கு எதிராக மக்கள் முழக்கங்கள் எழுப்பியபோது எடுக்கப்பட்டது என்று அதில் கூறப்பட்டிருந்ததையும் எங்களால் காண முடிந்தது.
இந்த காணொலியில் இருந்த நிருபரின் தொடர்பு எண்ணை எங்களால் அடையாளம் காண முடிந்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்த எண் சேவையில் இல்லாததால் அந்த நிருபரை எங்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை.
நாங்கள் சமூக வலைதளங்களில் இச்சம்பவம் குறித்த வார்த்தைகளை தேடினோம். அவ்வாறு தேடியதில், பேஸ்புக் பயனரான அக்ஷய் சாவந்த் என்பவரால் 23 செப்டம்பர் 2018 அன்று இந்த காணொலி பதிவேறப்பட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். மராத்தி மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த காணொலியின் தலைப்பானது, இது சிலை கரைப்பு விழாவின்போது எடுக்கப்பட்டது என்பதை நமக்குத் தெளிவுபடுத்தியது.
மேலும் 29 செப்டம்பர் 2018 அன்று சேடன் வேர் என்பவரால் யூடியூபில் பதிவேற்றப்பட்ட இந்த வைரல் காணொலியின் நீண்ட பதிப்பை நாங்கள் கண்டறிந்தோம். அதில் கொடுக்கப்பட்டிருந்த விளக்கம், தானே மேற்கில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு விழாவில் இந்த காணொலி எடுக்கப்பட்டது என்பதை நமக்குத் தெளிவுபடுத்தியது.
இதனை மேலும் சரிபார்க்க JNUவின் துணைத் தலைவர் சாகேத் மூனை நாங்கள் தொடர்பு கொண்டோம். இந்த வைரல் கூற்றை மறுத்த அவர், காணொலி JNUவுடன் தொடர்புடையது அல்ல என்று கூறினார்.
மேலும் JNUவில் இருந்து தேர்ச்சி பெற்று, PhD படிப்பு சேர்க்கைக்காக காத்திருக்கும் மற்றொரு மாணவரான விகாஸ் படேலும், இந்த காணொலி JNUவில் எடுக்கப்பட்டதல்ல என்று கூறினார்.
இந்த வைரல் காணொலியில் ஏராளமான மக்கள் முகக்கவசம் இல்லாமல் இருப்பதை நம்மால் காண முடிகிறது. கொரோனா தொற்றுநோய்க்கு முன்னரே இந்த காணொலி எடுக்கப்பட்டுவிட்டதை இது நமக்கு உறுதி செய்கிறது.
இந்த வைரல் கூற்றினை பகிர்ந்த பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், இப்பக்கத்திற்கு சுமார் 5,000 பின்தொடர்பவர்கள் இருப்பது நமக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் கூற்று தவறானது. பாகிஸ்தானுக்கு எதிராக மக்கள் முழக்கங்களை எழுப்பும் காணொலி 2018 இல் தானேவில் நடந்த விநாயகர் சிலைகள் கரைப்பு விழாவில் எடுக்கப்பட்டது.
- Claim Review : காவிநிற கொடிகளுடன் மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பும் காணொலி ஒன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) எடுக்கப்பட்டதாக வைரலாகி உள்ளது.
- Claimed By : பேஸ்புக் பக்கம்
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Telegram 9205270923
-
Email-Id contact@vishvasnews.com