
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொலி ஒன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஒரு சிலர் பேசுவதைக் காட்டுகிறது. இதனுடன் பகிரப்படும் கூற்று, வேளாண் மசோதா குறித்து பாஜக தலைவர்கள், அமைச்சருடன் கலந்துரையாடினர் என்று கூறுகிறது. இது தவிர, இந்தக் காணொலியில் உள்ள பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங்கிடம் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யுமாறு கோரிக்கை வைக்கின்றனர் என்று கூறியும் சில பயனர்கள் இதனைப் பகிர்ந்துள்ளனர்.
விஸ்வாஸ் செய்தி இந்த காணொலியை விசாரித்தபோது, முன்னரே இதே காணொலி NRC பெயரில் வைரலாக இருந்தது. எங்கள் விசாரணையின்படி, ஆகஸ்ட் 2018 இல், லக்னோவில் சிலர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து SC/ST சட்டத்திற்கு எதிராக ஒரு தீர்மானத்தைச் சமர்ப்பித்தனர். இந்த காணொலி 2018 இல் எடுக்கப்பட்டது. இதற்கும் சமீபத்திய விவசாயிகள் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கூற்று
2021 ஜனவரி 12 அன்று இந்தக் காணொலியை பதிவேற்றிய ட்விட்டர் பயனர் கபில் தானோடா, “பாஜக தலைவர்கள் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யுமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை வைத்தனர். இந்த சட்டங்கள் 5% விவசாயிகளுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருப்பதாகவும், 70% விவசாயிகளுக்கு அவை எதிராகவே உள்ளன என்றும் அவர்கள் அவரிடம் சொல்கிறார்கள்,” என்று எழுதியுள்ளார். இந்த ட்வீட்டின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இந்தக் காணொலியின் ஸ்கிரீன்கிராப்களை பிரித்தெடுக்க இன்விட் கருவியைப் பயன்படுத்தி, பின்பு அவற்றைக் கூகுள் தலைகீழ் படத் தேடலின் மூலம் தேடினோம்.
அவ்வாறு தேடியதில் ஆகஸ்ட் 9, 2018 அன்று பதிவேற்றப்பட்ட ஒரு காணொலியில், SC/ST மசோதாவுக்கு எதிராக ராஜ்நாத் சிங்கிடம் ஒரு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் பாஜக தலைவர் பீஷ்ம தார் திவேதி தலைமையில் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
விசாரணையின் அடுத்த கட்டமாக, பீஷ்மா தார் திவேதியின் பேஸ்புக் கணக்கினை நாங்கள் கண்டறிந்தோம். அக்கணக்கினில் இதே காணொலி, 26 செப்டம்பர் 2018 அன்று பதிவேற்றப்பட்டு இருந்ததை நம்மால் காண முடிந்தது.
நாங்கள் பீஷ்மா தார் திவேதியிடம் இது குறித்து பேசியதில், “இந்தக் காணொலி 5 ஆகஸ்ட் 2018 அன்று எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் நாங்கள் லக்னோவில் SC/ST சட்டத்திற்கு எதிராக ஒரு தீர்மானத்தை வழங்கினோம்,” என்று கூறினார்.
இந்தக் காணொலி மிகவும் பழையது என்றும், அப்போது லக்னோவில், SC/ST சட்டம் தொடர்பாக சிலர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் தனிப்பட்ட உதவியாளர் ரவி ரஞ்சன் நம்மிடத்தில் கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த ட்விட்டர் பயனர் கபில் டனோடாவின் கணக்கினை ஆராய்ந்ததில், இந்தப் பயனர் ஹரியானாவைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தோம். மேலும் இவரது கணக்கு ஏப்ரல் 2020 இல் உருவாக்கப்பட்டது என்பதையும், 111 பேர் இவரது கணக்கைப் பின்தொடர்கிறார்கள் என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.
निष्कर्ष: 2018 ஆகஸ்ட்டில், லக்னோவில் சிலர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து SC/ST சட்டத்திற்கு எதிராக ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்தனர். அது தொடர்பான இந்தக் காணொலியே தற்போது வைரலாகி உள்ளது. இதற்கும் சமீபத்திய விவசாயிகள் போராட்டதிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.