
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பரேலியில் அபராத சல்லான் போட்டதால் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை ஒரு பெண் செருப்பால் தாக்கும் காணொலி என சமூக ஊடகங்களில் ஒரு காணொலி வைரலாகி வருகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த காணொலி காசியாபாத்தில் 2018 ஆம் ஆண்டு நடந்த சம்பவமாகும்.
கூற்று
பேஸ்புக் பயனர் விமல் ஒரு இடுகையைப் பகிர்ந்து, “பரேலி சிவில் லைன்ஸ் செய்தி. காவல்துறை அபராத சல்லான் போட்டதால், இந்த வீடியோ, இந்தியாவில் என்ன நடக்கும், யார் நாட்டை நடத்துவார்கள், அனைவரின் எதிர்காலம் என்னவாக இருக்கும், உண்மை என்னவென்றால் நாட்டுக்கு வெளியில் இருக்கும் ஆபத்தை விட அதிகம் உள்ளே ஆபத்து உள்ளது ,இசுலாமிய பெண்,” என்று எழுதியுள்ளார். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
மற்றொரு பேஸ்புக் பயனரான விகேஷ் குமார் ராஜ்புத் ஒரு இடுகையைப் பகிர்ந்து கொண்டார். இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, நாங்கள் முதலில் இந்த வைரல் காணொலியை இன்விட் கருவியில் பதிவேற்றி, கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்தோம். பின்பு கூகுள் பின்னோக்கிய படத் தேடல் கருவியைப் பயன்படுத்தி அவற்றை இணையத்தில் தேடியதில், இந்தச் சம்பவம் காசியாபாத்தின் லோனி எல்லையில் ஒரு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் நடந்ததாகக் கூறி, ஆகஸ்ட் 28, 2018 அன்று வெளியிடப்பட்ட சில ஊடக அறிக்கைகளில் இந்த காணொலியைக் கண்டோம். ஆதார் அட்டையில் திருத்தங்களைச் செய்ய வந்த ஒரு வாடிக்கையாளரின் உறவினர்களால் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டார். சலான் வழங்கியதற்காக அவர் தாக்கப்பட்டதாகக் கூறும் எந்த உண்மையான செய்தி அறிக்கையினையும் எங்களால் காண முடியவில்லை.
காசியாபாத் காவல்துறையினர் ஒரு ட்வீட்டை 27 ஆகஸ்ட் 2018 அன்று வெளியிட்டுள்ளனர், அதில் SSP வைபவ் கிருஷ்ணா இந்தச் சம்பவம் லோனி எல்லையைச் நடந்தது என்பதையும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு காசியாபாத் மாவட்டத்தில் நடந்ததை தெளிவுபடுத்தி, 21 ஜனவரி 2021 அன்று பரேலி காவல்துறையினர் வெளியிட்ட மற்றொரு ட்வீட்டையும் நாங்கள் கண்டோம்.
இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் பரேலி SP ரஹித் சிங் சஜ்வானையும் தொடர்பு கொண்டோம். நம்மிடத்தில் பேசிய அவர், இந்த வைரல் காணொலியில் உள்ள சம்பவம் பரேலியைச் சேர்ந்தது அல்ல என்று அவர் கூறினார். இது காசியாபாத்திலிருந்து வந்த ஒரு பழைய சம்பவம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் நகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. காசியாபாத்தில் நடந்த ஒரு பழைய சம்பவத்தின் காணொலியே தவறான கூற்றுடன் வைரலாகி உள்ளது
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.