
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் ஒரு புகைப்படம், சில குழந்தைகள் கயிறு பாலத்தில் செல்வதைக் காட்டுகிறது. இதனுடன் பகிரப்படும் கூற்று, இவர்கள் உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் என்று கூறுகிறது.
இது குறித்து விஸ்வாஸ் செய்தி விசாரித்தபோது, அந்த இடுகை தவறானது என்பதைக் கண்டறிந்தோம். நேபாளத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம், இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் கயிறு பாலத்தில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் என்று தவறாகப் பகிரப்பட்டுள்ளது.
கூற்று
கமல் சாகர் என்ற பயனரால் பேஸ்புக்கில் பகிரப்பட்ட இடுகை, சில குழந்தைகள் கயிறு பாலத்தில் செல்வதைக் காட்டுகிறது. இந்த இடுகையுடன் உள்ள
கூற்று, இது உத்தரகண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்று கூறுகிறது.
இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க நாங்கள் இந்த வைரல் புகைப்படத்தைக் கூகுள் தலைகீழ் படத் தேடலை பயன்படுத்தித் தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்த புகைப்படத்தைக் கொண்ட பல அறிக்கைகளை இணையத்தில் நம்மால் காண முடிந்தது. 2013 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், குழந்தைகள் கயிற்றில் தொங்கும் இந்தப் புகைப்படம் நேபாளத்தில் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.
இதே புகைப்படம் “உலகிலேயே மிகவும் ஆபத்தான வழிகளில் பள்ளி செல்லும் குழந்தைகள்- முதல் 10 ஆபத்தான பாதைகள்” என்ற பட்டியல் ஒன்றிலும் பகிரப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலில் இருந்த இந்தப் புகைப்படத்தின் கீழே இருந்த விளக்கத்தில் “நேபாளத்தின் பெனிகாட் மாவட்டத்தில், குழந்தைகள் இந்தக் கயிறு பாதைகளைப் பயன்படுத்தித்தான் மறுபுறம் உள்ள தங்கள் பள்ளியை அடைய முடியும்,” என்று கூறுப்பட்டிருந்தது.
இந்த புகைப்படம் நேபாளத்தில் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
மை ரிபப்ளிக்கா என்ற இணையதளத்தில் இதே புகைப்படத்தை நம்மால் காண முடிந்தது. அதன் விளக்கத்தில் “மாணவர்கள் திரிசூலி ஆற்றைக் கடக்கிறார்கள். புட்சின் கிராமத்தில் மேல்நிலைக் கல்வி பயிலும் அனைத்தும் மாணவர்களும் ஒரு நாளைக்கு இரண்டு முறை ஆற்றைக் கடக்க வேண்டும். கப்பி சக்கரங்களுடன் இணைக்கப்பட்ட மேம்பட்ட ஸ்லிங் உதவியுடன் இப்பகுதியில் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஒரே மேல்நிலைப் பள்ளிக்கு இவர்கள் இவ்வாறு செல்கிறார்கள்,” என்று கூறப்பட்டுள்ளது.
கூகுளில் திரிசூலி நதியைத் தேடடியதில், அது நேபாளத்தில் இருப்பதைக் கண்டறிந்தோம்.
இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த டைனிக் ஜாக்ரானின் நிருபர் ஷைலேந்திர கோடியலை நாங்கள் தொடர்பு கொண்டோம். இது குறித்து அவர் கூறுகையில், “இந்த வைரல் புகைப்படம் உத்தரகண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது அல்ல. இது சமூக ஊடகங்களில் மிக நீண்ட காலமாக பகிரப்பட்டு வருகிறது,” என்றார்.
இந்த இடுகையை கமல் சாகர் என்ற பயனர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இந்தப் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், இந்தப் பயனர் நைனிடாலைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தோம்.
निष्कर्ष: இந்த இடுகை தவறானது. நேபாளத்தில் ஒரு கயிறு பாலத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது போன்ற புகைப்படம், உத்தரகண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்ற தவறான கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.