
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). ஒரு மத ஊர்வலத்தின்போது நடத்தப்பட்ட தடியடியின் காணொளி ஒன்று மேற்கு வங்கத்தில் நடந்ததாகக் கூறப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்பதும், இந்த வைரல் காணொளி பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
கூற்று
பேஸ்புக் பயனரான கிருஷ்ணெந்து கார் என்பவர் மத ஊர்வலம் ஒன்றில் காவல்துறை தாக்குதல் நடத்தும் ஒரு காணொளியைப் பகிர்ந்து, “மேற்கு வங்க மாநிலத்தில் இந்து மக்கள் மீது காவல்துறை தாக்குதல்!” என்ற எழுதியுள்ளார். இந்த வைரல் காணொளியை இங்கே காணலாம்.
பல பயனர்களும் இதே காணொளியை இதே போன்ற கூற்றுடன் பகிர்ந்துள்ளனர்.
விசாரணை
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த காணொளி பீகாரின் முங்கர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும், அக்டோபர் 26 அன்று துர்கா தேவி சிலை நீரில் கரைக்கப்படுவதற்கு முன் நடந்த ஊர்வலத்தின்போது காவல்துறையினர் தடியடி நடத்தினர் என்றும் தெரியவந்துள்ளது. ABP நியூஸ் அதன் யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ள இந்த வைரல் காணொளியில், “… பீகாரின் முங்கரில் எடுக்கப்பட்ட காட்சிகள், அங்கு துர்கா சிலைக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்,” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கூற்றினை சரிபார்க்க டைனிக் ஜாக்ரானின் பத்திரிகையாளர் திலீப் குமார் சுக்லாவை நாங்கள் தொடர்பு கொண்டோம். இந்த காணொளி குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், “இந்த காணொளி அக்டோபர் 26 அன்று நடந்த ஒரு சம்பவமாகும். காவல்துறையின் இந்த வன்முறைக்கு எதிராக மக்கள் முங்கரில் போராட்டங்களை நடத்தினர்,” என்று கூறினார்.
அக்டோபர் 29 அன்று டைனிக் ஜாக்ரானில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், “முங்கரில் நடைபெற்ற காவல்துறையின் தடியடி சம்பவத்தை எதிர்த்து கலவரக் கும்பல் ஒன்று காவல் நிலையத்தை சூறையாடியது … மேலும் இச்சம்பவம் தொடர்பாக அம்மாநில அரசு முங்கர் மாவட்டத்தின் நீதிபதியையும், கூடுதல் கண்காணிப்பாளரையும் பதிவியிலிருந்து நீக்கியது,” என்று கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த மற்றொரு செய்தி அறிக்கை, முங்கரில் துர்கா சிலை கரைத்தல் நிகழ்வின்போது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டு, FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து கிராமவாசிகள் சிபிஐ விசாரணைக்கு முறையிட்டதாக டைனிக் ஜாக்ரானில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரல் காணொளியை பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் மேற்கு வங்காளத்திலுள்ள கொல்கத்தாவில் வசிப்பவர் என்பது தெரியவந்தது.
निष्कर्ष: பீகாரின் முங்கர் மாவட்டத்தில் துர்கா சிலை கரைத்தல் நிகழ்வின்போது தடியடி நடத்தப்பட்ட காணொளி, மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்டதாக தவறான கூற்றுடன் வைரலாகியுள்ளது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.