X
X

Fact Check: கான்பூரில் ராம நவமி ஊர்வலத்தின் போது கற்கள் வீசப்பட்டதாகக் கூறுவது தவறானது.

கான்பூரில் உள்ள மெஸ்டன் சாலையில் ராம நவமி ஊர்வலத்தின் போது கல் வீசப்பட்டதாகக் கூறப்படுவது தவறானது. அது வெறும் வதந்தி, மேலும் தவறான தகவலைப் பரப்பியதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்): ராம நவமி ஊர்வலம் தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒரு கூற்று வைரலாகி வருகிறது, கான்பூரில் உள்ள மெஸ்டன் சாலையில் ராம நவமி ஊர்வலத்தினர் மீது கற்கள் வீசப்பட்டதாகக் குற்றம் சாட்டும் வீடியோவை சில பயனர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். ஊர்வலத்தின் போது ஏற்பட்ட குழப்பத்தின் காட்சிகளையும் இந்த வீடியோ காட்டுகிறது.

விஷ்வாஸ் நியூஸ் இந்தக் கூற்றை விசாரித்து, இது பொய்யானது என்பதைக் கண்டறிந்தது. உண்மையில், ஊர்வலத்தின் போது கல் வீசப்பட்டதாக சில நபர்கள் வதந்தியைப் பரப்பினர். பின்னர், இது தொடர்பாக காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்தனர்.

வைரல் பதிவு

இருந்த்து பேஸ்புக் பயனர் கேசவ் சிங் ஏப்ரல் 8, 2025 அன்று வீடியோவை (ஆர்க்கைவ் லின்க்) வெளியிட்டார் அது, “கான்பூரில் உள்ள மெஸ்டன் சாலையில் ராம நவமி ஊர்வலத்தின் மீது கற்கள் வீசப்பட்டன. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி வழியாகச் செல்லும்போது ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள் எழுப்பப்பட்டபோது வீடுகளில் இருந்து கற்கள் வீசப்பட்டன” என்ற வாசகங்களுடன் இருந்தது.

விசாரணை

இந்த வைரல் கூற்றை விசாரிக்க, முதலில் கான்பூர் காவல்துறையின் X ஹேண்டிலை சரிபார்த்தோம். அந்தக் அக்கவுண்டில், ஏப்ரல் 6 ஆம் தேதி, துணை காவல் ஆணையர் (DCP) கிழக்கு ஷ்ரவன் குமார் சிங்கின் அறிக்கை அதில் பகிரப்பட்டிருந்தது. இதில், மெஸ்டன் சாலையில் ராம நவமி ஊர்வலத்தின் போது கல் வீசப்பட்டதாகக் கூறப்படுவதை முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு ஒரு வதந்தி என்று கூறி அதை அவர் நிராகரித்தார். அத்தகைய சம்பவம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும், தொடர்புடைய வீடியோ எதுவும் வெளிவரவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இருப்பினும், ஏதேனும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 8 ஆம் தேதி, கான்பூர் காவல்துறையின் X பக்கத்தில் இருந்து சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் (ACP) ஹரிஷ் சந்தரின் வீடியோ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மெஸ்டன் சாலையில் ராம நவமி ஊர்வலத்தின் போது கல் வீசியதாக வதந்திகளை சில யூடியூபர்கள் மற்றும் சமூக விரோதிகள் பரப்பியதாகக் கூறினார். இந்த விஷயத்தில் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார். இதுபோன்ற தவறான பதிவுகளைப் பகிர்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏப்ரல் 7 ஆம் தேதி டைனிக் ஜாக்ரன் கான்பூர் பதிப்பில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, “ராமநவமி ஊர்வலத்தின் போது கற்கள் வீசப்பட்டதாக பரவிய வதந்தியால் குழப்பம் ஏற்பட்டது. வதந்திகளைப் பரப்பியவர்களை காவல்துறை தேடத் தொடங்கியுள்ளது. டிஜே அனுமதிக்கப்படாதபோது மக்கள் கோபமடைந்ததாக கூடுதல் காவல் ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஹரிஷ் சந்திரா கூறினார். இதன் காரணமாக, கல் வீசுதல் பற்றிய வதந்தியை மக்கள் பரப்பினர்.”

ஆஜ் தக்கின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி , “கலவரத்தை உருவாக்கியதற்காகவும், வதந்திகளைப் பரப்பியதற்காகவும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 200 பேர் மீது கான்பூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.”

கான்பூரில் உள்ள டைனிக் ஜாக்ரனின் குற்றவியல் நிருபர் கௌரவ் தீட்சித், மெஸ்டன் சாலையில் கல் வீசப்பட்டதாகக் கூறப்படுவது வெறும் வதந்தி என்பதை உறுதிப்படுத்தினார். இந்த விஷயத்தில் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தவறான கூற்றுடன் காணொளியைப் பகிர்ந்த பயனரின் சுயவிவரத்தையும் நாங்கள் ஸ்கேன் செய்தோம், அதில் அந்த பயனர் பாட்னாவில் வசிக்கிறார் என்பதையும், ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் தாக்கம் கொண்டவர் என்பதையும் கண்டறிந்தோம்.

முடிவு: கான்பூரில் உள்ள மெஸ்டன் சாலையில் ராம நவமி ஊர்வலத்தின் போது கல் வீசப்பட்டதாகக் கூறப்படுவது தவறானது. அது வெறும் வதந்தி, மேலும் தவறான தகவலைப் பரப்பியதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

  • Claim Review : கான்பூரில் உள்ள மெஸ்டன் சாலையில் ராம நவமி ஊர்வலத்தின் மீது கற்கள் வீசப்பட்டன.
  • Claimed By : ஃபேஸ்புக் பயனர் கேசவ் சிங்
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later