
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி) கொரானோவிலிருந்து மீண்டதற்குப் பின்பாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஹாஜி அலி தர்காவில் போர்வையினை (சடார்) காணிக்கையாக வழங்க சென்றார் என்று கோரி, சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தி விசாரணையில் இந்த கூற்று தவறானது என்று தெரியவந்தது. 2011 ஆம் ஆண்டில் அவர் அஜ்மீர் ஷெரீப்புக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படமே இப்போது தவறான கூற்றுக்களுடன் வைரலாகியுள்ளது.
கூற்று
பேஸ்புக் பயனர் ரோஹித் ஜெய்ஸ்வால் சுஜித், அமிதாப் பச்சன் ஒரு பெரிய கூட்டத்தின் நடுவில் தலையில் தொப்பியுடன் காணப்படும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த இடுகையில், “அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டபோது, கோயில்கள் அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனைகள் செய்தன. இப்போது அவர் மீண்டும் நல்ல உடல்நிலைக்கு திரும்பிவிட்டதால், அவர் ஹாஜி அலி தர்காவுக்குச் சென்று போர்வையினைக் காணிக்கையாக வழங்கினார்,” என்று குறிப்பிட்டுள்ளார. இடுகையினை இங்கே காணலாம்.
விசாரணை
இந்த இடுகை குறித்து விசாரிக்க, நாங்கள் முதலில் கூகிள் தலைகீழ் படத் தேடல் கருவியில் (Google Reverse Image Search Tool) படத்தைத் தேடினோம். அதில் 2011 ஜூலை 4 அன்று வெளியிடப்பட்ட இந்தியா டுடேயின் ஒரு செய்தி அறிக்கையை நாங்கள் கண்டோம். அந்த செய்தி அறிக்கை அமிதாப் பச்சன் அஜ்மீர் ஷெரீப் தர்காவுக்கு 2011 இல் சென்று வந்ததைத் தெளிவுபடுத்தியது. மேலும் அதன் புகைப்பட கேலரியில், சமீபத்தில் ஹாஜி அலி தர்காவில் இருப்பதாக தவறான கூற்றுடன் வைரலாகி வரும் அமிதாப் பச்சனின் அதே புகைப்படத்தை எங்களால் காண முடிந்தது.
மேலும் இது குறித்து இணையத்தில் தேடியபோது, பாலிவுட் குறித்து செய்திகள் பகிரும் ‘ஜூம்’ யூடியூப் சேனலில் 6 ஜூலை 2011 அன்று பதிவேற்றப்பட்ட காணொளியை நம்மால் காண முடிந்தது. தற்போது தவறான கூற்றுக்களுடன் வைரலாகி வரும் அந்தப் புகைப்படத்தின் காணொளியே அது என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும் விவரங்களுக்காக, கொரோனா வைரஸிலிருந்து மீண்டபின் அமிதாப்பச்சன் ஹாஜி அலி தர்காவுக்குச் சென்றாரா என்பதைக் கண்டுபிடிக்க முடிவு செய்தோம். ஆனால் அது குறித்து தேடியதில் எந்த செய்தி தளத்திலும் இதுபோன்ற செய்தியை எங்களால் காண முடியவில்லை.
இது குறித்த சரிபார்க்க எங்கள் தோழரும், டைனிக் ஜாக்ரானின் தலைமை நிருபருமான ஸ்மிதா ஸ்ரீவாஸ்தவாவை தொடர்பு கொண்டோம். இது குறித்து பேசுகையில் “அமிதாப் பச்சனின் இந்தப் படம் சமீபத்திய நிகழ்விலிருந்து வந்ததல்ல. இந்தக் கூற்று முற்றிலும் தவறானது,” என்று கூறினார்.
இந்தக் புகைப்படத்தினை தவறான கூற்றுடன் பகிர்ந்த பேஸ்புக் பயனர் ரோஹித் ஜெய்ஸ்வால் சுஜித் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் டெல்லியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
निष्कर्ष: கொரோனாவிலிருந்து மீண்டதற்குப் பின்பாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஹாஜி அலி தர்காவுக்குச் செல்லவில்லை. அந்தக் கூற்று தவறானது. 2011 ஆம் ஆண்டில் அவர் அஜ்மீர் ஷெரீப்புக்கு சென்றபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படமே இப்போது தவறான கூற்றுக்களுடன் வைரலாகியுள்ளது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.