உண்மைச் சரிபார்ப்பு: நிக்கி யாதவ், குற்றம் சாட்டப்பட்ட சாஹில் கெலாட் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்; தவறான கூற்றுடன் பகிரப்பட்ட இடுகை
- By Vishvas News
- Updated: February 28, 2023

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): நிக்கி யாதவ் அவரது திருமணம் செய்து கொள்ளாத வாழ்க்கை துணையான சாஹில் கெலாட் என்பவரால் கொலை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது. விஸ்வாஸ் நியூஸ் இந்த கூற்றை விசாரித்து, அந்த இடுகை தவறான கூற்றுகளுடன் பகிரப்பட்டது என்றும் சாஹில் கெலாட் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் கண்டறிந்தது.
உரிமைகோரல்:
முகநூல் பயனர் தீபேஷ் உவ் பிப்ரவரி 15 அன்று டிவி9 செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை (காப்பக இணைப்பு) பகிர்ந்து கொண்டு, மேலும் தலைப்பில் எழுதியதாவது, “டெல்லியில் மீண்டும் ஒரு இந்துப் பெண் அப்துலுக்கு பலியாகிவிட்டார், ஷ்ரத்தாவைப் போலவே ஒரே விஷயத்தை செய்யும் எண்ணம் கொண்டிருந்தார் நிக்கி யாதவ்.”

விசாரணை:
வைரலான கூற்றை விசாரிக்க, விஸ்வாஸ் நியூஸ் குழு முதலில் முக்கிய வார்த்தைகளுடன் கூகுளில் திறந்த தேடலை மேற்கொண்டது. பிப்ரவரி 15 அன்று டைனிக் ஜாக்ரானில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, “சாஹில் கெலாட் நிக்கி யாதவை டேட்டா கேபிளால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றத்தைச் செய்த பிறகு, சாஹல் நிக்கியின் சடலத்தை மித்ரான் கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான சாலையோர உணவகத்தில் குளிர்சாதன பெட்டியில் அடைத்தார்.”

நிக்கியை கொன்று உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்தபிறகு சாஹல் வீட்டிற்கு சென்று தனது குடும்பத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக டைனிக் ஜாக்ரான் செய்தி அறிக்கை மேலும் கூறியுள்ளது.
பிப்ரவரி 15 அன்று நியூஸ்18 வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியிருந்ததாவது, “24 வயதான கெஹ்லாட், நிக்கியை காரில் வைத்து கொன்றபிறகு அவளது உடலை தாபாவின் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தார். பின்னர் அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வீட்டிற்கு சென்றார்”. அந்தச் செய்தி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட சாஹில் கெலாட்டின் திருமணப் படமும் இடம்பெற்றிருந்தது.

டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு பிப்ரவரி 14 அன்று நிக்கி யாதவ் கொல்லப்பட்ட செய்தியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது. குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் வீரேந்திர சிங் என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தகவலுக்கு, விஸ்வாஸ் நியூஸ் குழு டெல்லியின் துவாரகாவில் உள்ள டைனிக் ஜாக்ரனின் கிரைம் நிருபர் கௌதம் மிஸ்ராவிடம் பேசியது. அப்போது அவர் கூறியதாவது, “சாஹில் கெலாட்டின் தந்தையின் பெயர் வீரேந்திர சிங். அவரும் நிக்கியின் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த விவகாரம் தற்போது குற்றப்பிரிவில் உள்ளது.”
வகுப்புவாத கோணத்தில் இந்த பதிவைப் பகிர்ந்த முகநூல் பயனாளர் தீபேஷ் உவ்வின் சுயவிவரத்தை நாங்கள் தேடிப் பார்த்தோம். அதன்படி, அவர் வாரணாசியில் வசிக்கிறார் மற்றும் அவர் ஒரு சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார்.
முடிவு: டெல்லியிலுள்ள நிக்கி யாதவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட சாஹில் கெலாட் ஒரு இந்து. இந்த வழக்கில் வகுப்புவாத கோணம் இல்லை.
- Claim Review : நிக்கி யாதவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்
- Claimed By : முகநூல் பயனர்: தீபேஷ் உவ்
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Email-Id contact@vishvasnews.com