உண்மை சரிபார்ப்பு: மசினகுடியில் யானையை அர்பாஸ் கான் என்பவர் கொல்லவில்லை, வைரல் கூற்று தெளிவற்றது
இந்த வைரல் இடுகை தெளிவற்றது. யானை தாக்கப்பட்ட சம்பவத்தில் அர்பாஸ் கான் என்ற நபர் ஈடுபடவில்லை.
- By Vishvas News
- Updated: January 29, 2021

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). ஒரு யானை மீது எரியும் டயரை வீசப்படும் காணொலி, அர்பாஸ் கான் என்பவர் யானையை கொன்றார் என்ற கூற்றுடன் வைரலாகியுள்ளது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த வைரல் பதிவு தெளிவற்றது என்று தெரியவந்தது. 40 வயதுடைய யானை ஒன்று ஜனவரி 19 ஆம் தேதி தமிழ்நாட்டின் மசினகுடியில் தீ வைக்கப்பட்ட டயரால் தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்தது. முதுமலை புலிகள் சரணாலயத்தின் (MTR) துணை இயக்குநர், அர்பாஸ் கான் என்ற நபர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் கூற்றுக்களை மறுத்துவிட்டார்.
கூற்று
தீ வைக்கப்பட்ட டயரால் ஒரு யானை தாக்கப்படும் காணொலியைப் பகிர்ந்த பேஸ்புக் பயனர் விஜய் குப்தா, “இது மிகவும் கோரமான சம்பவம், ஜிகாதி அர்பாஸ் கான் தமிழ்நாட்டின் நீலகிரியில் யானை மீது எரியும் டயரை வீசினார்! இதன் காரணமாக யானை சிகிச்சையின் போது இறந்தது .. மாநில போலீசார் தூங்குகிறார்கள், இத்தகையவர்களுக்கு மட்டும் சட்டத்தில் இருந்து பாதுகாப்பு இருக்கிறதா?” என்று எழுதியுள்ளார். இந்த வைரல் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
எரியும் டயர் மூலம் யானை தாக்கப்பட்ட செய்தி குறித்து இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்த வைரல் காணொலியுடன் வெளியிடப்பட்ட பல ஊடக அறிக்கைகளை நாங்கள் கண்டோம். அதில், “தமிழ்நாட்டில் கிராமவாசிகளால் தீ கொண்டு தாக்கப்பட்டதால் 40 வயதான ஒரு யானை இறந்தது. யானையை விரட்ட கிராமவாசிகள் எரியும் டயரை வீசியதாக கூறப்படுகிறது. எரியும் டயர் யானையின் காதில் சிக்கி, வலியில் அது அங்கிருந்து ஓடியது. துரதிர்ஷ்டவசமாக, ஜனவரி 19 அன்று மருத்துவ சிகிச்சைக்காக ஒரு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்தது. இந்தச் சம்பவத்திலும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஒருவர் தலைமறைவாக உள்ளார்,” என்று கூறப்பட்டிருந்தது.
இதன் உண்மை சரிபார்ப்புக்காக நாங்கள் MTRரின் துணை இயக்குநர் LSC ஸ்ரீகாந்தை தொடர்பு கொண்டு பேசினோம். இந்த சம்பவத்தை நமக்குத் தெளிவுபடுத்திய அவர், சில கிராமவாசிகள் ஜனவரி 3 ஆம் தேதி யானையை விரட்ட இதுபோன்ற முறையை பின்பற்றினர் என்று கூறினார். “இந்த வழக்கில் பிரசாந்த் சுகுமாரன், ரேமண்ட் டீன் மற்றும் ரிக்கி ரியான் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில், ரியான் இன்னும் தலைமறைவாக உள்ளார், மீதமுள்ள இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடக பயனர்கள் இந்த விஷயத்திற்கு ஒரு மதவாத சாயலை பூசுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள், அது தவறானது. இந்த குற்றத்தில் அர்பாஸ் கான் என்ற நபர் இல்லை,” என்று கூறினார்.
இந்த இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு பேஸ்புக்கில் 2500 க்கும் மேற்பட்ட நண்பர்கள் உள்ளனர் என்பது தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் இடுகை தெளிவற்றது. யானை தாக்கப்பட்ட சம்பவத்தில் அர்பாஸ் கான் என்ற நபர் ஈடுபடவில்லை.
- Claim Review : ஒரு யானை மீது எரியும் டயரை வீசப்படும் காணொலி, அர்பாஸ் கான் என்பவர் யானையை கொன்றார் என்ற கூற்றுடன் வைரலாகியுள்ளது.
- Claimed By : பேஸ்புக் பயனர்
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Telegram 9205270923
-
Email-Id contact@vishvasnews.com