உண்மைச் சரிபார்ப்பு: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீதான வைரலான செய்தித்தாள் கிளிப்பிங் ஆறு வருடங்கள் பழமையானது, தவறான கூற்றுடன் பகிரப்பட்டது
- By Vishvas News
- Updated: March 20, 2023

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்): டெல்லி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை அடுத்து ஆம் ஆத்மி கட்சி தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பற்றிய செய்தித்தாள் ஒன்று இணையத்தில் சுற்றிக்கொண்டு வருகிறது. வைரலான இந்த இடுகையின் உண்மை நிலையை சோதித்தறிந்த விஸ்வாஸ் நியூஸ், இந்த இடுகையில் உள்ளது ஆறு வருடங்கள் பழமையான செய்தி என்பதையும், இது இப்போது பகவந்த் மானின் இமேஜைக் கெடுக்கும் வகையில் பகிரப்பட்டு வருகிறது என்பதையும் கண்டறிந்தது.
உரிமைகோரல்:
முகநூல் பயனாளர் நிதிஷ் யாதவ் கன்னௌஜ் பிப்ரவரி 28 அன்று, “மகாராணா பிரதாப்பின் வழித்தோன்றல் மணீஷ் சிசோடியாவின் கைது இந்த மனிதனை மிகவும் காயப்படுத்தியது” என்று எழுதி, வெட்டப்பட்ட செய்தித்தாள் துண்டு (காப்பக இணைப்பு) ஒன்றை பதிவு செய்தார். இந்த இடுகை உண்மை என்று கருதி, மற்ற பயனர்களும் அதைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
விசாரணை:
வைரலான இந்த இடுகை பற்றிய உண்மையை அறிந்து கொள்ள விஸ்வாஸ் நியூஸ் கூகுளின் திறந்த தேடல் கருவியின் உதவியை முதலில் நாடியது. தொடர்புடைய முக்கிய வார்த்தைகளுடன் தேடியபோது, Bhaskar.com-ல் வெளியான ஓர் செய்தி அறிக்கை கிடைத்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தி அறிக்கையின் தலைப்பு மற்றும் உள்ளடக்கம் தற்போதைய வைரல் இடுகையில் எழுதப்பட்டதைப் போலவே இருப்பது கண்டறியப்பட்டது, இருப்பினும் இந்த வைரல் இடுகையில் உள்ள சூழல் தவறானது.
பாஸ்கர் இந்தியில் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியதாவது, “சனிக்கிழமை மோக பூரணி அனாஜ் மண்டியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பகவந்த் மான் வந்தபோது, அவர் 5 நிமிடங்கள் கூட்டத்திற்கு பறக்கும் முத்தங்களை தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். மான், தனது உரையின் போது, தடுமாறி, தன் முதுகை மக்கள் மீது சாய்த்து நின்றார். பிரசங்கம் முடிந்தவுடன் அவர் மீண்டும் விழுந்தார். அவர் திரும்பிச் செல்லத் தொடங்கியபோது, அவர் மீண்டும் படிக்கட்டில் தடுமாறினார், ஆனால் அவரது பாதுகாவலர் அவரை பிடித்துக்கொண்டார்”.
பாஜகவின் பஞ்சாப் பிரிவும் ஜனவரி 30, 2017 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் (முகநூல்) இந்த செய்தி அறிக்கையைப் பகிர்ந்துள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் அதே நாளில் பாஸ்கரின் செய்தி அறிக்கையின் அதே கிளிப்பிங்கை ட்வீட் செய்திருந்தார்.
விசாரணையை முன்னோக்கி எடுத்துச் சென்ற விஸ்வாஸ் நியூஸ், மோகாவின் டைனிக் ஜாக்ரானின் தலைமை நிருபர் சத்யன் ஓஜாவைத் தொடர்பு கொண்டு, பகவந்த் மான் தொடர்பான வைரலான பதிவைப் அவருடன் பகிர்ந்தது. இது மிகவும் பழைய படம் என்றார் அவர். அண்மைக் காலத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தித்தாள் கிளிப்பிங்கைப் பகிர்ந்துள்ள முகநூல் பயனாளர் நிதிஷ் யாதவ் கன்னௌஜ், உத்தரபிரதேசத்தில் உள்ள கன்னோஜில் வசிப்பவர் என்று சமூக ஊடக தேடல் காட்டியது. முகநூலில் அவரது நண்பர்களின் எண்ணிக்கை 4,000 க்கும் அதிகமாக உள்ள போது, அவரது கணக்கை 1,687 பேர் பின்தொடர்கின்றனர்.
முடிவு: பகவந்த் மான் பற்றிய வைரல் இடுகை தவறானது என்று விஸ்வாஸ் நியூஸ் கண்டறிந்தது. பகவந்த் மானுக்கு எதிராக பிரசாரம் செய்யும் தவறான நோக்கத்துடன், ஆறு ஆண்டுகளுக்கு முன் வெளியான ஓர் செய்தி அறிக்கை தற்போது பகிரப்பட்டு வருகிறது.
- Claim Review : பஞ்சாபின் மோகாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் பகவந்த் மான் தடுமாறி விழுந்தார்
- Claimed By : முகநூல் பயனர்: நிதிஷ் யாதவ் கன்னௌஜ்
- Fact Check : Misleading

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Email-Id contact@vishvasnews.com