
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வைரல் பதிவு, இந்திய ரிசர்வ் வங்கி 100, 10 மற்றும் 5 ரூபாய்களின் பழைய நோட்டுகளை மார்ச் மாதத்திலிருந்து திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை இதுபோன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை.
கூற்று
பேஸ்புக் பயனர் கிட்மதி சஃபர், பழைய 5 ரூபாய், 100 ரூபாய், மற்றும் 10 ரூபாய் தாள்களின் படங்களுடன் ஒரு இடுகையை பகிர்ந்து, மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு என்று எழுதியுள்ளார். இந்த வைரல் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
இதே போன்ற கூற்றுகளுடன் ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் பெறப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும். பணமதிப்பிழப்புக்கு பிறகு 2019ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஊதா நிற ரூ.100 நோட்டுகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சிலர் பகிர்ந்துள்ளனர்.
விசாரணை
இது குறித்து இணையத்தில் தேடியதில், பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படுவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்படலாம் என்பது குறித்த ரிசர்வ் வங்கியின் திட்டம் பற்றி மங்களூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூட்டமைப்பு மேலாண்மைக் குழு கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் B மகேமேஷ் பேசியிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். அது தொடங்கியே இது போன்ற பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக இருப்பதை நாம் அடையாளம் காண முடிந்தது.
ரிசர்வ் வங்கி 2018 ஆம் ஆண்டில் ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் தாளை வெளியிட்டு, புழக்கத்தில் இருக்கும் பழைய 100 ரூபாய் நோட்டுகளும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை இங்கே காணலாம்.
இதன் விசாரணைக்காக நாங்கள் ரிசர்வ் வங்கியின் தகவல் தொடர்புத் துறையின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாலின் உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடத்தில் பேசிய அவர், “இந்த வைரல் பதிவு தவறானது. தற்போது, ரிசர்வ் வங்கி இத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை,” என்று கூறினார். மேலும் தொடர்ந்த அவர், ரிசர்வ் வங்கியும் சமீபத்தில் ஒரு ட்வீட்டில் இதை தெளிவுபடுத்தியுள்ளது என்று கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு பேஸ்புக்கில் 46,815 பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பது தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. 100, 10 மற்றும் 5 ரூபாய்களின் பழைய நோட்டுகளை அரசு திரும்பப் பெறவில்லை.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.