Fact Check:பெஷாவரில் சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிரான நடவடிக்கையின் பழைய காணொளி இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு மத்தியில் தவறாகப் பகிரப்பட்டது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் பதற்றத்திற்கு மத்தியில், தவறான கூற்றுகளுடன் பல வீடியோக்கள் மற்றும் படங்கள் பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிரப்படுகின்றன.
- By: Umam Noor
- Published: May 31, 2025 at 01:59 PM
புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்): இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவி வரும் பதற்றத்திற்கு மத்தியில், தவறான கூற்றுகளுடன் பல வீடியோக்கள் மற்றும் படங்கள் பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிரப்படுகின்றன. இதுபோன்ற ஒரு வைரல் வீடியோவில், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியில் பல கட்டுமானங்கள் இடிக்கப்படுவதைக் காட்டப்படுகிறது. பயனர்கள் இதை, இந்திய இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக சியால்கோட்டில் ஏற்பட்ட அழிவைக் காட்டுகிறது என்கிற கூற்றுகளுடன் பகிர்கின்றனர்.
விஷ்வாஸ் நியூஸ் இந்த கூற்றை ஆராய்ச்சி செய்ததில், இந்த வீடியோ அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை இடிப்பது தொடர்பானது என்றும், எந்த இராணுவ நடவடிக்கையுடனும் தொடர்புடையது அல்ல என்றும் கண்டறிந்தது.
வைரல் பதிவில் என்ன இருக்கிறது?
பேஸ்புக் பயனர் ‘சந்திரசேகர்’ என்பவர் மே 12, 2025 அன்று வைரல் பதிவைப் பகிர்ந்து பின்வருமாறு எழுதியுள்ளார் “இந்தியா பாகிஸ்தானைத் தாக்கியது. யார் கண்டுபிடிப்பார்கள்? சியால்கோட்டா அல்லது காசாவா. குறிப்பு – யாரும் இதை கூகுள் செய்ய மாட்டார்கள்”.
பதிவின் ஆர்க்கைவ்டு லின்க்கை இங்கே காண்க .

விசாரணை
எங்கள் விசாரணையைத் தொடங்க, முதலில் வைரல் வீடியோவிலிருந்து முக்கிய பிரேம்களைப் பிரித்தெடுத்து கூகுள் லென்ஸைப் பயன்படுத்தி அவற்றைத் தேடினோம். இது, மே 13, 2025 அன்று X ஹேண்டிலில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவிற்கு எங்களை இட்டு சென்றது. இது இந்தியாவின் இராணுவ நடவடிக்கை என்று தவறாகக் கூறப்படுகிறது. இருந்தபோதும், பதிவின் கமெண்ட் செக்ஷனில், பல பயனர்கள் இந்த வீடியோ, சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராக பெஷாவர் நிர்வாகம் நடத்திய இடிப்பு நடவடிக்கையைக் கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில், ‘பெஷாவர்’ உள்ளிட்ட தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலமாக வீடியோவின் ஃப்ரேமைத் தேடினோம். இதன் விளைவாக மார்ச் 27, 2025 அன்று ஒரு டிக்டாக் கணக்கில் பதிவேற்றப்பட்ட இதே வீடியோ எங்களுக்குக் கிடைத்தது. இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டதால், VPN (விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்) வழியாக வீடியோவை அணுகினோம். இங்கே உள்ள தலைப்பின்படி, இது பெஷாவரில் உள்ள ஃபேஸ்-3 சௌக்கை காட்டும் வீடியோ.

எங்களது புலனாய்வின் தொடர்ச்சியாக, பதிவேற்றப்பட்ட இதேபோன்ற காணொளியைக் கண்டோம். அதில், “பல்கலைக்கழக சாலையில் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்கொண்டு நடத்திய தேடல்கள், கசௌதி டிஜிட்டல் பெஷாவர் இணையதளத்தில் மார்ச் 27, 2025 அன்று வெளியிடப்பட்ட தொடர்புடைய செய்திக்கு எங்களை இட்டுச் சென்றன. அந்த அறிக்கையின்படி, “மாகாண தலைநகரில் ஆக்கிரமிப்புக்கு எதிராக பெஷாவர் மாவட்ட நிர்வாகம் ஹயாதாபாத்தின் கட்டம்-3 சௌக்கில் 18 சட்டவிரோத கட்டிடங்களை இடித்தது. ரூ.2.5 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 8 கனல் (நில அளவு) மதிப்புள்ள நிலமும் ஆக்கிரமிப்பு மாஃபியாவிடமிருந்து மீட்கப்பட்டதாக டிசி சர்மத் சலீம் அக்ரம் கூறியுள்ளார்.” என்று கூறப்பட்டுள்ளது.
எங்கள் விசாரணையின் போது, மார்ச் 27 அன்று ‘துணை ஆணையர் பெஷாவரின்’ அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பேஜில் பகிரப்பட்ட தொடர்புடைய பதிவை நாங்கள் கண்டோம். அந்தப் பதிவில் பல படங்கள் இடம்பெற்றிருந்தன, அவற்றுடன், “மாகாண அரசாங்கத்தின் உத்தரவுகளைப் பின்பற்றி, பெஷாவர் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒரு பெரிய நடவடிக்கையைத் தொடங்கியது, மேலும் 18 சட்டவிரோத கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. 8 கனல் (நில அளவு) மதிப்புள்ள அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு மாஃபியாவிடமிருந்து மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.2.5 பில்லியனுக்கும் அதிகமாகும், இது ஆக்கிரமிப்பு மாஃபியாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பிடிஏ, தலைநகர் பெருநகர அரசு, சிவில் பாதுகாப்பு மற்றும் வருவாய் அதிகாரிகள் இந்த பெரிய அளவிலான நடவடிக்கையில் முழுமையாக பங்கேற்றனர்” என்றிருந்தது.
வைரலான காணொளியை சரிபார்க்க, பெஷாவரைச் சேர்ந்த அரபு செய்தி நிறுவன பத்திரிகையாளர் அர்ஷத் யூசுப்சாயை நாங்கள் தொடர்பு கொண்டு, வைரலான பதிவை அவருடன் பகிர்ந்து கொண்டோம். அவர், “இந்த காணொளி மார்ச் மாதம் பெஷாவரில் நடந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான பிரச்சாரத்துடன் தொடர்புடையது” என்று உறுதிப்படுத்தினார்.
அடுத்து, போலியான பதிவைப் பகிர்ந்த ‘சந்திரசேகர்’ என்ற பேஸ்புக் பயனர் மீது சோஷியல் ஸ்கேன் ஒன்றை நாங்கள் மேற்கொண்டோம். அதில், அந்தப் பயனருக்கு 3000க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்கள் இருப்பதையும், தவறான உள்ளடக்கம் பலவற்றை ஏற்கனவே பகிர்ந்துள்ளதையும் கண்டறிந்தோம்.
முடிவு: விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில், வைரல் காணொளி பாகிஸ்தானின் பெஷாவரில் இருந்து வந்தது என்றும், உள்ளூர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகள் இடிக்கப்படுவதைக் காட்டுகிறது என்றும் கண்டறிந்துள்ளது. இந்தியாவின் இராணுவ நடவடிக்கையுடன் பொய்யாகத் தொடர்புபடுத்தி இந்த காணொளி தவறான கூற்றுடன் பகிரப்படுகிறது.
- Claim Review : பகுதியாக சியால்கோட்டில் ஏற்பட்ட அழிவைக் காட்டுகிறது என்கிற கூற்றுகளுடன் பகிர்கின்றனர்.
- Claimed By : Facebook user Chandrashekhar
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.











