உண்மை சரிபார்ப்பு: முகக்கவசம் அணிவது மட்டும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்காது, இந்த இடுகையில் முக்கியமான தகவல்கள் விடுபட்டுள்ளன
- By Vishvas News
- Updated: December 15, 2020

புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). முகக்கவசம் வேலை செய்தால், மக்கள் ஏன் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களிலிருந்து விலகியே இருக்க வேண்டும், அப்படி முகமூடிகள் வேலை செய்யவில்லை என்றால், நாம் நம் குழந்தைகளுக்கு ஏன் அவற்றை அணிவிக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இது குறித்து விஸ்வாஸ் செய்தி விசாரித்தபோது, இந்த கூற்றில் சில முக்கியமான தகவல்கள் விடுபட்டுள்ளன என்பது நமக்குத் தெரியவந்தது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும், கைகளை சுத்தமாக வைத்திருக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை.
கூற்று
பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு கூற்றில், “முகக்கவசம் வேலை செய்கின்றன என்றால், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்க மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அப்படி அவை வேலை செய்யவில்லை என்றால், அவற்றை குழந்தைகளுக்கு அணியாது இருக்க வேண்டும். யாரோ இங்கு பொய் உரைக்கிறார்கள்…” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், நோய் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) ஒரு அறிக்கையை கண்டோம். “கோவிட்-19 இன் பரவலைக் குறைக்க, முகமூடிகளை அணிவது, கழுவப்படாத கைகளைக் கொண்டு முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பது, சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை குறைந்தது 20 விநாடிகள் கழுவுவது போன்ற பிற அன்றாட தடுப்பு நடவடிக்கைகளுடன் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிவது சமூக இடைவெளிக்கு மாற்று இல்லை. குறைந்தபட்சம் 6 அடி இடைவெளிவிட்டு விலகி நிற்பதோடு கூடுதலாக முகக்கவசம் அணிய வேண்டும்,” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது வைரஸ் பரவலைக் குறைக்க உதவுகிறது என்றாலும், அதனோடு சரியான கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவையும் சேர்ந்தே கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது இங்கே உறுதியாகிறது.
மேலும் இது குறித்து நுரையீரல் நிபுணரும், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவனித்தும் வருபவருமான டாக்டர் நிகில் மோடியுடன் நாங்கள் பேசினோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், “நீங்கள் மற்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வரையில், முகக்கவசம் அணிவதால் உங்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு சமூக இடைவெளி மற்றும் சரியான கை கழுவுதல் ஆகியவற்றை நாம் கடைபிடிக்க வேண்டும்,” என்று கூறினார்.
பென்னி வீன்ஸ்-நார்மண்ட்யூ என்ற பயனர் பேஸ்புக்கில் இந்த இடுகையை பகிர்ந்துள்ளார். இந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், இந்த பயனர் பிரின்ஸ்டனைச் சேர்ந்தவர் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
முடிவு:இல்லை, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முகக்கவசம் மட்டுமே உதவ முடியாது. சரியான கை கழுவுதலும், சமூக இடைவெளியும் இதனோடு கடைபிடிக்கப்பட வேண்டும். இந்த வைரஸ் இடுகையில் சில முக்கியமான தகவல்கள் விடுபட்டுள்ளன.
பொறுப்புத்துறப்பு: CoronavirusFacts எனும் தரவுத்தளம் கோவிட்-19 பரவலின் தொடக்கத்திலிருந்து வெளிவரும் தகவல்களின் உண்மை-சரிபார்ப்புகளை பதிவு செய்து வருகிறது. கொரோனா தொற்றுநோயும் அதன் விளைவுகளும் தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே வருவதோடு மட்டுமல்லாது, சில வாரங்கள் அல்லது சில நாட்களுக்கு முன்பு துல்லியமாக இருந்த தரவுகளே கூட மாறிபோகக்கூடிய சூழ்நிலையும் தற்போது உள்ளது. அதனால் ஓர் செய்தியை நீங்கள் பகிர்வதற்கு முன்பு, அச்செய்தி எந்த நாளில் உண்மைச் சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்கு பின்னர் பகிரவும்.
- Claim Review : முகக்கவசம் வேலை செய்கின்றன என்றால், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்க மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அப்படி அவை வேலை செய்யவில்லை என்றால், அவற்றை குழந்தைகளுக்கு அணியாது இருக்க வேண்டும். யாரோ இங்கு பொய் உரைக்கிறார்கள்
- Claimed By : பேஸ்புக் பயனர்
- Fact Check : Misleading

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Telegram 9205270923
-
Email-Id contact@vishvasnews.com