
பாகற்காய் சாறால் நாவல் கொரோனா வைரஸை 2 மணிநேரத்தில் குணப்படுத்த முடியும் என்று சமூக ஊடகங்களில் ஒரு வைரலான பதிவு கூறுகிறது. மேலும் இந்த தகவல் பீகார் சுகாதாரத் துறையினால் வெளியிடப்பட்டது என்று அவர்களுடைய பெயரையும் இந்த பதிவு குறிப்பிட்டுள்ளது. இந்த வைரலான கூற்று பொய்யானது என்பதை விஸ்வாஸ் நியூஸ் விசாரித்து, கண்டறிந்துள்ளது. இந்த வைரலான கூற்றுக்கு ஆதரவாக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி இந்த கூற்றை மருத்துவ நிபுணர்கள் மறுத்துள்ளனர்.
முகமது ஷாஹித் என்ற பயனர் பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட பதிவு பின்வருமாறு: கொரோனா வைரஸ்க்கான சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகற்காய் சாறு அருந்துவது கொரோனா வைரஸை 2 மணிநேரத்தில் கொல்லும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பாட்னாவிலுள்ள பீகார் சுகாதாரத் துறையின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. காப்பகத்தில் சேமிக்கப்பட்ட பதிவை இங்கே பார்க்கலாம்.
விஸ்வாஸ் நியூஸ் பீகாரின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் பொது சுகாதாரப் பிரிவின் தலைமை இயக்குநர் டாக்டர் நவீன் சந்திர பிரசாத் அவர்களை தொடர்பு கொண்டு தனது விசாரணையைத் துவங்கியது. அவர் கூறுகையில்: “இது ஒரு பொய்யான கூற்று. இதுபோன்ற எந்த அறிக்கையையும் நாங்கள் வெளியிடவில்லை. இவை முற்றிலும் பொய்யான வதந்திகள். இந்த கூற்றுக்கு ஆதரவாக எந்த ஆதாரமும் கிடையாது.“
அதாவது இந்த வைரலான கூற்று பீகார் அரசாங்கத்தின் சுகாதாரத் துறையை பொய்யாக காரணம் காட்டியுள்ளது.
பாகற்காயால் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியுமா என்பது குறித்த அறிக்கைகளை தேடுவதன் மூலம் நாங்கள் விசாரணையைத் தொடர்ந்தோம். சைன்ஸ் டைரக்ட்வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, பாகற்காயில் சில மருத்துவ நன்மைகள் உள்ளன. ஆனால், பாகற்காயால் கொரோனா வைரஸை 2 மணிநேரத்தில் குணப்படுத்த முடியும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
ஆயுஷ் அமைச்சகத்தின் மருந்தியல் அதிகாரியான டாக்டர் என். விமல் அவர்களிடம் விஸ்வாஸ் நியூஸ் பேசியது. அவரும் இந்த கூற்றை மறுத்துக் கூறியது பின்வருமாறு: “இதுபொய்யானது. பாகற்காய்கொரோனாவைரஸைகுணப்படுத்தாது.”
பத்திரிகை தகவல் துறையும் டுவிட்டரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, மேலும் பாகற்காய் சாறினால் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. இது ஒரு பொய்யான கூற்று.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுக்க தற்போது எந்த தடுப்பூசியும் கிடையாது. இருப்பினும், சுவாச வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்.
கொரோனா வைரஸ் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பிய இதுபோன்ற வைரலான பதிவுகளை விஸ்வாஸ் நியூஸ் பொய் என்று நிரூபித்துள்ளது. இந்த பதிவுகளை ஹெல்த் ஃபேக்ட் செக் பக்கத்தில் பார்க்கலாம்.
निष्कर्ष: பாகற்காயானது நாவல் கொரோனா வைரஸை 2 மணிநேரத்தில் குணமாக்கும் என்ற பதிவு பொய்யானது. பீகார் சுகாதாரத் துறையானது எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.