
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதாக பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படம், தமிழ்நாட்டின் பெருமையை நாடு முழுவதும் எடுத்துச்செல்ல ‘தமிழ்நாடு’ என்கிற பெயர், ‘தக்ஷிண பிரதேசம்’ என்று மாற்றப்படும் என்று கூறுகிறது. மற்றொரு பதிவு ‘நிச்சல பிரதேசம்’ என்று மாற்றப்படும் என்று கூறுகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை, எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி எடிட் செய்யப்பட்டு, தவறான கூற்றுகளுடன் பகிரப்பட்டிருப்பது தெரியவந்தது.
கூற்று
பேஸ்புக் பயனர் எம்.வி.முத்து கிருஷ்ணன் மருதூர் என்பவர், ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, “தமிழ்நாடு பெயர் “தக்ஷிண பிரதேஷ்” என்று சமஸ்கிருதத்தில் மாற்றப்படும். #பாஜக தேர்தல் அறிக்கை!! இதைத்தான் இத்தனை நாளா நோண்டிட்டு இருந்தயா அப்ப நோட்டாவ முந்தின மாதிரி தான்… 😏” என்று எழுதியுள்ளார்.
மற்றொரு சமூக ஊடக பயனர், தமிழ்நாட்டின் பெயர் ‘நிச்சல பிரதேசம்’ என மாற்றப்படும் என்று கூறும் படத்தை பகிர்ந்துள்ளார்.
விசாரணை
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை சென்னையில் பாஜக வெளியிட்டததைத் தொடர்ந்து, பல சமூக ஊடக பயனர்களும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, தங்களின் கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வேலைவாய்ப்பு மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான பாஜகவின் முக்கிய வாக்குறுதிகள் குறித்த செய்தி அறிக்கைகளை நாங்கள் கண்டறிந்தாலும், இந்த வைரல் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
பாஜக தமிழ்நாடு ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில் விவசாயத்தையும், விவசாயிகளையும் மேம்படுத்துவதற்கான பாஜக தேர்தல் அறிக்கையின் அசல் புகைப்படத்தை நாங்கள் கண்டறிந்தோம்.
இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் தமிழக பாஜகவின் தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், “பாஜக இதுபோன்று எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை, எங்கள் அறிக்கையின் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு தவறான கூற்றுடன் பகிரப்பட்டுள்ளது, நாங்கள் இதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவோம்,” என்று கூறினார்.
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் முழு தேர்தல் அறிக்கையையும் இங்கே காணலாம்.
234 தொகுதிகளுக்கான தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதியும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் மொத்தம் ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்று டைனிக் ஜாக்ரானின் ஒரு கட்டுரை கூறுகிறது.
இந்த வைரல் புகைப்படத்தைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் சிங்கப்பூரில் வசிப்பதும், பேஸ்புக்கில் அவருக்கு 3,501 பின்தொடர்பவர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
இந்த வைரல் கூற்று தவறானது. பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையில் இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
निष्कर्ष: இந்த வைரல் கூற்று தவறானது. பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையில் இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.