உண்மை சரிபார்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் புயல்கள் குறித்த எச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை, இந்த வைரல் பதிவு தவறானது
இந்த வைரல் பதிவு தவறானது. இதுபோன்ற எந்த எச்சரிக்கையினையும் தாங்கள் வெளியிடவில்லை என்று கூறி, வானிலை ஆய்வு மையம் இந்த கூற்றினை மறுத்துள்ளது.
- By Vishvas News
- Updated: December 10, 2020

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஊடகங்களில் பகிரப்படும் வைரல் பதிவு ஒன்று, தமிழ்நாட்டினை தாக்கவிருக்கும் ஐந்து புயல்கள் (தாக்தாவ், யாஸ், குலாப், ஷாஹீன், ஜவாத்) குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்திருப்பதாகக் கூறுகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அத்தகைய எச்சரிக்கைகள் எதையும் தாங்கள் வெளியிடவில்லை என்பதை நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
கூற்று
பேஸ்புக் பக்கம் ஒன்றில், “டிசம்பர் 8 ஆம் தேதி புயல் வரலாம் “Tauktao” என்று பெயர் … டிசம்பர் 17 ஆம் தேதி புயல் வரலாம் “Yaas” என்று பெயர் … டிசம்பர் 24 ஆம் தேதி புயல் வரலாம் “Gulab”என்று பெயர் … ஜனவரி 01 ஆம் தேதி ஒரு புயல் வரலாம். “Shaheen”என்று பெயர் … ஜனவரி 8 ஆம் தேதி ஒருபுயல் வரலாம் “Jawad “என்று பெயர் …தமிழ்நாடு ஒரு புயல் மாநிலமாக உருவாகிறதா என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வைரல் பதிவு கூறுகிறது. இந்த வைரல் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.

விசாரணை
நம் நாட்டின் தென் மாநிலங்களை நிவர் புயல் தாக்கி சில வாரங்களே ஆன நிலையில், அடுத்ததாக புரேவி புயல் குறித்து (தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கனமழை பெய்யக்கூடுமென) இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து டிசம்பர் 5 அன்று டைனிக் ஜாக்ரான் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், “புரேவி புயல் தற்போது பலவீனமடைந்துள்ளது. இந்த புயல் அடுத்த 12 மணி நேரம் மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. ஆழ்ந்த அழுத்தம் காரணமாக, மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த புயல் தற்போது பலவீனமடைந்து, அதே இடத்திலேயே நிலைகொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. மேலும் குறைந்த அழுத்த பகுதியில் நிலைகொண்டு இருப்பதால், அடுத்த 12 மணி நேரத்தில் இந்த புயல் மேலும் பலவீனமடையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.
இது தவிர, இந்த வைரல் கூற்றில் கூறப்பட்டுள்ளது போன்ற புதிய புயல்கள் குறித்த எச்சரிக்கை பற்றிய எந்த செய்தி அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் தேடியபோதும், இதுபோன்ற புயல் எச்சரிக்கை எதையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக இந்த இணையதளத்தில் வழங்கப்பட்டிருந்த தொடர்பின் மூலம், அப்பகுதியின் புயல் எச்சரிக்கை மையத்தை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய வானிலைத் துறையின் அறிவியல் உதவியாளர் பிரணவ் பாரதி, இந்த வைரல் பதிவில் கூறப்பட்டுள்ள கூற்றுக்களை மறுத்தார். மேலும் தொடர்ந்த அவர், “இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது போல, தமிழகத்தை புயல்கள் தாக்குவது குறித்த எந்த எச்சரிக்கையினையும் நாங்கள் வெளியிடவில்லை,” என்று கூறினார்.
இந்த வைரல் கூற்றைப் பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், இப்பக்கத்திற்கு 523 பின்தொடர்பவர்கள் இருப்பது நமக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இதுபோன்ற எந்த எச்சரிக்கையினையும் தாங்கள் வெளியிடவில்லை என்று கூறி, வானிலை ஆய்வு மையம் இந்த கூற்றினை மறுத்துள்ளது.
- Claim Review : டிசம்பர் 8 ஆம் தேதி புயல் வரலாம்
- Claimed By : பேஸ்புக் பக்கம்
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Telegram 9205270923
-
Email-Id contact@vishvasnews.com