
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில், முகேஷ் அம்பானி மற்றும் நிதா அம்பானி ஆகியோரின் புகைப்படத்தை சச்சினின் பின்னால் உள்ள சுவரில் நம்மால் காண முடிகிறது. பிரதம மந்திரி அலுவலகத்தில் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோரின் புகைப்படம் இருப்பதாக இதைப் பகிர்ந்த பயனர்கள் எழுதியுள்ளனர்.
இது குறித்து விஸ்வாஸ் செய்தி விசாரித்தபோது, அம்பானி குடும்பத்தின் புகைப்படம் இந்த வைரல் புகைப்படத்தில் எடிட்டிங் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த வைரல் புகைப்படத்தை கொண்டுள்ள இந்த இடுகை தவறானது.
கூற்று
மார்ச் 5, 2021 அன்று, பேஸ்புக் பயனரான சுமித் வால்மிகி ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றி, ‘அலுவலகத்தில் உரிமையாளரின் புகைப்படத்தைப் பாருங்கள், குருட்டு பக்தரின் அடிமைத்தனத்திற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை’என்று எழுதியுள்ளார்.
இந்த பேஸ்புக் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, கூகுள் பின்னோக்கிய படத் தேடல் கருவி மூலம் பிரதமர் மோடி மற்றும் சச்சின் இடம்பெற்றிருக்கும் இந்த வைரல் படத்தை நாங்கள் தேடினோம். அவ்வாறு தேடியதில், மே 19, 2017 அன்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் இதன் அசல் புகைப்படத்தைக் கண்டறிந்தோம். இங்கே கிளிக் செய்வதன் மூலம் அந்த அறிக்கையைப் படிக்கலாம். இந்த அறிக்கையில், சச்சின் டெண்டுல்கர் தனது ‘சச்சின்: ஒரு பில்லியன் கனவுகள்’ திரைப்படம் தொடர்பாக பிரதமரை சந்தித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது, எக்ஸ்பிரஸ் ஸ்போர்ட்ஸின் ட்விட்டர் கணக்கிலும் இந்த வைரல் புகைப்படத்தைக் கண்டறிந்தோம். சச்சின் டெண்டுல்கர் தனது திரைப்படம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததாக மே 19, 2017 அன்று அந்த வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் பாஜக தலைவர் ராகேஷ் திரிபாதியை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், பிரதமரின் இந்த வைரல் புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பயனர் சுமித் வால்மிகியின் கணக்கினை நாங்கள் ஆராய்ந்ததில், அந்த பயனர் டெல்லியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தோம்.
निष्कर्ष: அம்பானி குடும்பத்தின் புகைப்படம் வைரல் இடுகையில் உள்ள புகைப்படத்துடன் எடிட்டிங் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வைரல் இடுகை தவறானது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.