உண்மை சரிபார்ப்பு: இந்திய விமானப்படையின் சுகோய் -30 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை, வைரல் கூற்று தவறானது
திபெத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானமான சுகோய் -30ஐ சீனா சுட்டு வீழ்த்தியது என்னும் வைரல் பதிவு தவறானது. இந்தக் கூற்றினை இந்திய விமானப்படை மறுத்துள்ளது.
- By Vishvas News
- Updated: October 4, 2020

புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்). இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) போர் விமானமான சுகோய் SU-30 ஐ சீனா சுட்டு வீழ்த்தியதாக சமூக ஊடகங்களில் ஒரு வைரல் பதிவு கூறுகிறது. இது முதலில் ட்விட்டரிலும் பின்னர் பேஸ்புக்கிலும் பிரேக்கிங் நியூஸாக பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது. இத்தகைய கூற்றுக்களை இந்திய விமானப்படை மறுத்துள்ளது.
கூற்று
இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) போர் விமானமான சுகோய் SU-30 ஐ சீனா திபெத்தில் சுட்டு வீழ்த்தியதாக சமூக ஊடகங்களில் ஒரு வைரல் பதிவு கூறுகிறது. அந்த இடுகையை இங்கே காணலாம்.
இதே போன்ற கூற்றுகளை பேஸ்புக்கிலும் எங்களால் காண முடிந்தது.

விசாரணை
இணையத்தில் இந்தக் கூற்று குறித்து தேடியதில், இது குறித்த எந்தத் தகவலையும் எங்களால் காண முடியவில்லை. இருப்பினும், எல்லைகளில் இந்திய விமானப்படையின் செயல்பாடு குறித்த செய்தி அறிக்கைகளை எங்களால் காண முடிந்தது.
செப்டம்பர் 25 அன்று டைனிக் ஜாக்ரான் வெளியிட்ட ஒரு கட்டுரையில், “இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிகழ்ந்த தொடர் பதட்டத்தின் போது, எல்லையில் இந்திய விமானப்படை கண்காணிப்பு பணியினை மேற்கொண்டது. இந்திய விமானப்படை SU-30MKI போர் விமானம் குலாம் காஷ்மீரிலும் (PoK), சீன எல்லைக்கு அருகில் ஒரு விமான தளத்திலும் கண்காணிப்பு பணி மேற்கொண்டது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் எல்லையில் சுகோயின் செயல்பாட்டை உறுதிப்படுத்தும் ANI இன் ட்வீட்டையும் எங்களால் காண முடிந்தது.
சுகோய் – 30 போர் விமானத்தை சீனா சுட்டு வீழ்த்தியதா என்பதை சரிபார்க்க விஸ்வாஸ் நியூஸ் இந்திய விமானப்படையை தொடர்பு கொண்டோம். விங் கமாண்டர் இந்திரனில் நந்தி, இந்த வைரல் கூற்று தவறானது என்றும், இதுபோன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்றும் நமக்குத் தெளிவுபடுத்தினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பக்கமான சர்தார் தில்னாவாஸ் பி.டி.ஐயினை ஆராய்ந்ததில், அப்பக்கம் 3,260 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது என்பதும், 13 மே 2018 முதல் அது செயலில் உள்ளது என்பதும் தெரியவந்தது.
निष्कर्ष: திபெத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானமான சுகோய் -30ஐ சீனா சுட்டு வீழ்த்தியது என்னும் வைரல் பதிவு தவறானது. இந்தக் கூற்றினை இந்திய விமானப்படை மறுத்துள்ளது.
- Claim Review : இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) போர் விமானமான சுகோய் SU-30 ஐ சீனா திபெத்தில் சுட்டு வீழ்த்தியது
- Claimed By : பேஸ்புக் பக்கம் சர்தார் தில்னாவாஸ் பி.டி.ஐ
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Telegram 9205270923
-
Email-Id contact@vishvasnews.com