
புதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி). கழுத்தில் காவி நிற துணியும், பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய டி-ஷர்ட்டையும் அணிந்திருக்கும் ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த நபர் ஒரு காவல்துறை அலுவலருக்கு முன்னால் லத்தி போன்ற ஒன்றைக் காண்பிப்பதைக் நம்மால் காண முடிகிறது. 26 ஜனவரி அன்று குடியரசு தின கொண்டாட்டங்களுக்குப் பிறகு நடந்த டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த வன்முறைகளின் நிகழ்வுகளைக் காண்பிப்பதாக இந்தப் புகைப்படம் கூறுகிறது.
இது குறித்து விஸ்வாஸ் நியூஸ் விசாரித்தபோது, அந்தக் கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டது. இந்தப் புகைப்படம் கடந்த 2014 ஜூன் மாதத்தில் உ.பி சட்டப்பேரவை முன் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கும், உத்தரபிரதேச காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் புகைப்படம்.
கூற்று
கிசான் புத்ரா என்ற பயனர் பேஸ்புக்கில் ஒரு இடுகையைப் பகிர்ந்து, “கைகோர்த்துக் கொண்டு பொய்களைப் பரப்ப வேண்டாம் என்று சொல்கிறேன். விவசாயிகளை இழிவுபடுத்த வேண்டாம்,” என்று எழுதியுள்ளார். இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட இணைப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, கூகுள் பின்னோக்கிய படக் கருவியைப் பயன்படுத்தி இந்தப் படத்தைத் தேடியதில், 30 ஜூன் 2014 அன்று oneindia.com இல் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையைக் கண்டோம். அந்த அறிக்கையில், “உத்தரபிரதேசத்தின் தலைநகரில் சட்டம் ஒழுங்கின்மை மற்றும் அதிகார நெருக்கடி காரணமாக, பாஜக தொண்டர்கள் திங்களன்று ஆளும் சமாஜ்வாடி கட்சிக்கு எதிராக வன்முறை போராட்டம் நடத்தினர்,” என்று கூறப்பட்டுள்ளது.
இதே புகைப்படத்தை 1 ஜூலை 2014 அன்று telegraphindia.com வெளியிட்ட அறிக்கையிலும் நம்மால் காண முடிந்தது. இந்தப் புகைப்படத்தின் தலைப்பின் படி, “திங்களன்று, லக்னோவில் உள்ள சட்டசபைக்கு வெளியே நடந்த போராட்டத்தின் போது ஒரு காவல்துறை அலுவலர் பாஜக தொண்டருடன் சண்டையிட்டார். (பி.டி.ஐ) “ என்று கூறப்பட்டுள்ளது.
இதனை மேலும் உறுதிப்படுத்த, லக்னோவில் உள்ள டைனிக் ஜாக்ரானின் நிருபர் அஜய் ஸ்ரீவாஸ்தவாவை நாங்கள் தொடர்பு கொண்டோம். இது குறித்து அவர் கூறுகையில், “இந்த புகைப்படம் 2014 ல் எடுக்கப்பட்டது, சில பாஜக தொண்டர்கள் லக்னோவில் சட்டசபைக்கு வெளியே காவல்துறையினருடன் மோதிக்கொண்டனர்,” என்றார்.
இந்த வைரல் கூற்றைப் பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பயனரான கிசான் புத்ராவின் கணக்கை ஆராய்ந்ததில், அவருக்கு பேஸ்புக்கில் 304 பின்தொடர்பவர்கள் இருப்பதும், அவர் ஹரியானாவில் உள்ள ஹிசாரைச் சேர்ந்தவர் என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்தக் கூற்று தவறானது. இந்தப் புகைப்படம் 2014 ஜூன் மாதத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், உத்தரபிரதேச காவல்துறையினருடன் உ.பி. சட்டப்பேரவை முன் மோதிக்கொண்டபோது எடுக்கப்பட்டது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.