புதுடெல்லி (விஸ்வாஸ் நியூஸ்).வேல் யாத்திரை அனுமதிக்கப்படாவிட்டால் தீ குளிக்க போவதாக இந்து மக்கள் கட்சியின் (இ.ம.க) தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக, சமூக ஊடகங்களில் ஒரு வைரல் பதிவு கூறுகிறது.
விஸ்வாஸ் செய்தி விசாரணையில் இந்த கூற்று தவறானது என்பதும், இ.ம.க வின் தலைவர் அத்தகைய அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பதும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது.
கூற்று
இந்து மக்கள் கட்சியின் தலைவரான அர்ஜுன் சம்பத்தின் புகைப்படத்துடன் சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வைரல் பதிவு, வேல் யாத்திரைக்கு அனுமதி தராவிட்டால் நான் தீ குளிப்பேன் என்று கூறியதாக பகிர்ந்துள்ளனர். இந்த வைரல் இடுகையை இங்கே காணலாம்.
பல பயனர்களும் இதே கூற்றினை பல்வேறு சமூக ஊடக தளங்களிலும் பகிர்ந்துள்ளனர்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, வேல் யாத்திரை பற்றிய தகவல்களுக்காக இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், வேல் யாத்திரையை அனுமதியின்றி நடத்தியதற்காக பாஜக கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்த பல செய்தி கட்டுரைகள் நமக்குக் கிடைத்தன.
“நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை திட்டமிடப்பட்டிருந்த யாத்திரை, கோவிட்-19 சூழலின் காரணமாக அனுமதிக்கப்படாது என்று மாநில அரசு கடந்த வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது,” என்று NDTV இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரை கூறுகிறது.
இருப்பினும், இ.ம.க குறித்தோ, அக்கட்சித் தலைவரின் அறிக்கை குறித்தோ, எந்தச் செய்தியையும் எங்களால் காண முடியவில்லை.
இந்த கூற்றினை சரிபார்க்க இ.ம.க வின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை நாங்கள் தொடர்பு கொண்டோம். இந்த கூற்றுக்களை முற்றிலுமாக மறுத்த அவர், இத்தகைய அறிக்கைகள் எதையும் தான் வெளியிடவில்லை என்று எங்களுக்கு தெளிவுபடுத்தினார். “இந்த பதிவு தவறானது. இந்த கூற்றுக்கள் குறித்து மக்களை எச்சரிக்கும் ஒரு ட்வீட்டையும் நான் வெளியிட்டுள்ளேன்,” என்று கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், இப்பக்கதிற்கு 41,951 பின்தொடர்பவர்கள் இருப்பது எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் கூற்று தவறானது. இ.ம.க வின் தலைவர் அர்ஜுன் சம்பத் இது போன்ற எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.