உண்மை சரிபார்ப்பு: தர்காவுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட அசோக் கெக்லோட்டின் பழைய காணொளி தெளிவற்ற கூற்றுடன் வைரலாகிறது
இந்த வைரல் இடுகை தெளிவற்றது. ராஜஸ்தானின் முதல்வரான அசோக் கெஹ்லோட் துங்கர்பூரில் ஒரு தர்காவுக்கு வருகை தந்த பழைய காணொளியே தற்போது தெளிவற்ற கூற்றுகளுடன் வைரலாகியுள்ளது.
- By Vishvas News
- Updated: November 19, 2020

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் ஒரு தர்காவிலிருந்து வெளியேறும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தீபாவளிக்கு பட்டாசு விற்பனையை தடை செய்த பின்னர், அவர் அங்கு பிரார்த்தனை செய்ய சென்றார் என்று அந்த கூற்று உரைக்கிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தெளிவற்றது என்று தெரியவந்தது. துங்கர்பூரில் உள்ள தர்காவுக்கு கெஹ்லோட் சென்று வந்த பழைய காணொளியே தற்போது வைரலாகியுள்ளது.
கூற்று
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தர்காவிலிருந்து வெளியே வரும் ஒரு வைரல் காணொளி, தீபாவளியின்போது பட்டாசுகளை தடை செய்த பின்னர் தர்காவிற்கு சென்று அவர் நமாஸ் செய்தார் என்ற கூற்றுடன் பகிரப்படுகிறது. இந்த இடுகையை இங்கே காணலாம்.
விசாரணை
நாங்கள் முதலில் வைரல் காணொளியை இன்விட் கருவியில் பதிவேற்றி, கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்தோம். பின்னர் கூகுள் தலைகீழ் பட தேடல் கருவியைப் பயன்படுத்தி, அவற்றை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், நியூஸ் 53 நெட்வொர்க்கின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட இந்த காணொளியின் வைரல் கிளிப்புகளை 28 ஜனவரி 2019 அன்று பதிவேற்றப்பட்டிருப்பதை கண்டோம். அதன் விளக்கத்தில், “ராஜஸ்தான் முதல்வரான அசோக் கெஹ்லோட் இன்று கலியாகோட்டில் உள்ள சயத் பக்ருதீன் ஷாஹீத்தின் கல்லறைக்கு வருகை தந்தார்,” என்று கூறப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் இந்தியா நியூஸ் ராஜஸ்தானின் யூடியூப் சேனலும் இந்த காணொளியை ஜனவரி மாதத்தில் பதிவேற்றி, கெக்லோட்டின் கலியாகோட் மசார் வருகை குறித்து நமக்குத் தெளிவுபடுத்தியது.
இந்த கூற்றினைச் சரிபார்க்க நைதுனியாவின் ராஜஸ்தான் நிருபர் மணீஷை நாங்கள் தொடர்பு கொண்டோம். நம்மிடத்தில் பேசிய அவர், “இந்த காணொளி 2019 ஜனவரியின்போது அசோக் கெஹ்லோட் துங்கர்பூருக்கு சென்றபோது எடுக்கப்பட்டது. அவர் கலியாகோட்டில் உள்ள சில கோவில்களிலும், ஃபக்ருதீன் கல்லறையிலும் பிரார்த்தனை செய்தார். இந்த காணொளி ஃபக்ருதீனின் தர்காவில் எடுக்கப்பட்டது,” என்று கூறினார்.
இந்த இடுகையைப் பகிர்ந்துகொண்ட பல பயனர்களுள் ஒருவரான சச்சின் குரானாவின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் முசாபர்நகரில் வசிப்பவர் என்பதும், பேஸ்புக்கில் அவருக்கு 779 பின்தொடர்பவர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் இடுகை தெளிவற்றது. ராஜஸ்தானின் முதல்வரான அசோக் கெஹ்லோட் துங்கர்பூரில் ஒரு தர்காவுக்கு வருகை தந்த பழைய காணொளியே தற்போது தெளிவற்ற கூற்றுகளுடன் வைரலாகியுள்ளது.
- Claim Review : ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தர்காவிலிருந்து வெளியே வரும் ஒரு வைரல் காணொளி, தீபாவளியின்போது பட்டாசுகளை தடை செய்த பின்னர் தர்காவிற்கு சென்று அவர் நமாஸ் செய்தார் என்ற கூற்றுடன் பகிரப்படுகிறது.
- Claimed By : பேஸ்புக் பயனர் சச்சின் குரானா
- Fact Check : Misleading

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Telegram 9205270923
-
Email-Id contact@vishvasnews.com