உண்மை சரிபார்ப்பு: கோவிட் -19 தடுப்பூசி குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த அறிக்கையை வெளியிடவில்லை, வைரல் கூற்று தவறானது
இந்த வைரல் பதிவு தவறானது. இந்தியா அல்லது இஸ்ரேலுக்கு கோவிட் -19 தடுப்பூசியினை கொடுப்பது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதே உண்மை.
- By Vishvas News
- Updated: December 23, 2020

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பாகிஸ்தான் ஒரு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தால், அதனை நாங்கள் ஒருபோதும் இஸ்ரேலுடனோ, இந்தியாவுடனோ பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு வைரல் பதிவு கூறுகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் முன்னாள் ஆசிரியர், இந்த வைரல் பதிவில் கூறப்பட்டுள்ளது போன்ற எந்த அறிக்கையையும் பாகிஸ்தான் பிரதமர் வெளியிடவில்லை என்று நமக்குத் தெளிவுபடுத்தினார்.
கூற்று
டிசம்பர் 18 அன்று வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில், “பாகிஸ்தான் கொரோனா தடுப்பூசியை ஒன்றை கண்டுபிடித்தால், அதனை நாங்கள் ஒருபோதும் இஸ்ரேலுடனோ, இந்தியாவுடனோ பகிர்ந்து கொள்ள மாட்டோம் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,” என்று கூறப்பட்டுள்ளது. இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
பாகிஸ்தான், கோவிட் -19 தடுப்பூசி வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை 250 மில்லியன் டாலர்களாக அதிகரித்தும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுடன் வெளிப்படுத்தாத ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டும் ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில், பாகிஸ்தான் தடுப்பூசிகள் கண்டுபிடிப்பது குறித்தோ, அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால், அதனை இந்தியா மற்றும் இஸ்ரேலுக்கு வழங்குவது பற்றி பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்தது குறித்தோ எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் வெளிவரவில்லை.

பாகிஸ்தானில் தற்போது 18,000 தன்னார்வலர்களில் 15,000 பேர் சீன கோவிட் -19 தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ள நிலையில், அதன் மருத்துவ சோதனை நடப்பு மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு பிறகு மற்றொரு தடுப்பூசி பரிசோதனையைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் என்று டிசம்பர் 21 அன்று டான் வெளியிட்ட ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூற்றினைச் சரிபார்க்க நாங்கள் பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் முன்னாள் செய்தி ஆசிரியர் வலீத் தாரிக்கை தொடர்பு கொண்டு பேசினோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், “இந்த வைரல் கூற்று தவறானது. உண்மையில், அவர் (பிரதமர் இம்ரான் கான்) சமீப காலங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பற்றி எந்த கருத்தும் கூறவில்லை. பாகிஸ்தான் ஒரு தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சி செய்வது குறித்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதிகாரிகள் ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களுடனும், சீனாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் பாகிஸ்தானில் தங்களின் தடுப்பூசியினை பரிசோதித்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது,” என்று கூறினார்.
இந்த இடுகையைப் பகிர்ந்த ட்விட்டர் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு ட்விட்டரில் 1,868 பின்தொடர்பவர்கள் இருப்பதும், ஜூன் 2017 முதல் அவரது கணக்கு செயலில் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இந்தியா அல்லது இஸ்ரேலுக்கு கோவிட் -19 தடுப்பூசியினை கொடுப்பது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதே உண்மை.
- Claim Review : பாகிஸ்தான் கொரோனா தடுப்பூசியை ஒன்றை கண்டுபிடித்தால், அதனை நாங்கள் ஒருபோதும் இஸ்ரேலுடனோ, இந்தியாவுடனோ பகிர்ந்து கொள்ள மாட்டோம் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,
- Claimed By : ட்விட்டர் பயனர்
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Telegram 9205270923
-
Email-Id contact@vishvasnews.com