உண்மை சரிபார்ப்பு: பஞ்சாபில் இறந்த கான்ஸ்டபிளின் புகைப்படங்கள் தவறான கூற்றுடன் வைரலாகிறது
பஞ்சாபில் பெண் கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்ற வைரல் கூற்று தவறானது. சாலை விபத்தில் அவர் இறந்தார் என்பதே உண்மை.
- By Vishvas News
- Updated: October 9, 2020

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). காவலர் சீருடை மற்றும் அடையாள அட்டையில் இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம், பஞ்சாபில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார் என்ற கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது. அவரது உடல் சாலையில் வீசப்பட்டதாக அந்த பதிவு கூறுகிறது.
இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்பதும், புகைப்படத்தில் உள்ள பெண் கான்ஸ்டபிள் சாலை விபத்தில் இறந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
கூற்று
இந்த புகைப்படங்களை அக்டோபர் 2 அன்று ஒரு ட்விட்டர் பயனர் பகிர்ந்து,
“பஞ்சாப் ஃபதேஹ்கர் சூரியன் சாலை அருகே சங்கத்புராவில் ஒரு பெண் கான்ஸ்டபிளின் உடல் கண்டெடுக்கப்பட்டது….அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்,” என்று எழுதியுள்ளார்.
பேஸ்புக் பயனர் சஞ்சு ராவத் கோட்புட்லியும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து, “பஞ்சாபில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் கொலை. காவல்துறையும் பாதுகாப்பாக இல்லையா? அவர்கள் மட்டுமே ஹத்ராஸில் அரசியல் செய்வார்கள். ராஜஸ்தான், சத்தீஸ்கரில் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன, மகள்கள் (பெண்கள்) பாதுகாப்பாக இல்லை,” என்று எழுதியுள்ளார். இந்த இடுகையை இங்கே காணலாம்.
விசாரணை
அந்தப் புகைபடங்களை கவனமாக பார்த்ததில், புகைப்படத்தில் உள்ள அடையாள அட்டை அந்தப் பெண்ணை அமிர்தசரஸ் நகரில் ‘எல் / கான்ஸ்டபிள்’ ஆக நியமிக்கப்பட்ட நோமி என அடையாளம் காட்டுவதை எங்களால் காண முடிந்தது.
இது குறித்த சொற்களை இணையத்தில் தேடியதில் (நோமி, கான்ஸ்டபிள், அம்ரிஸ்டார்), அக்டோபர் 1 ம் தேதி அன்று டைனிக் ஜாக்ரான் வெளியிட்ட செய்தி அறிக்கையினை எங்களால் காண முடிந்தது. அதில் “வியாழக்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்த பஞ்சாப் காவல்துறையின் பெண் கான்ஸ்டபிள், வேகமாக வந்த ஸ்கார்பியோவால் தாக்கப்பட்டார். விபத்தில் அந்த கான்ஸ்டபிள் இறந்தார்… ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ‘ட்ரிப்யூன்‘ மற்றும் ‘பஞ்சாப் கேசரி‘ ஆகியவற்றிலும் எங்களால் காண முடிந்தது. அந்த வைரல் கூற்று போல பாலியல் வன்கொடுமை குறித்த எந்த செய்தி அறிக்கையையும் எங்களால் காண முடியவில்லை.
இந்த கூற்றினை சரிபார்க்க ஜாக்ரானின் அமிர்தசரஸ் நிருபர் நிதின் திமானை தொடர்பு கொண்டோம். நம்மிடத்தில் பேசிய அவர் “புகைப்படங்களில் உள்ள பெண் கான்ஸ்டபிள் சாலை விபத்தில் இறந்தார். அவர் அமிர்தசரஸில் பணிபுரிந்தார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்ற கூற்று தவறானது,” என்று கூறினார்.
வைரல் புகைப்படத்தை இடுகையுடன் பகிர்ந்து கொண்ட பேஸ்புக் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்பதும், பேஸ்புக்கில் 21,427 பின்தொடர்பவர்கள் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: பஞ்சாபில் பெண் கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்ற வைரல் கூற்று தவறானது. சாலை விபத்தில் அவர் இறந்தார் என்பதே உண்மை.
- Claim Review : காவலர் சீருடை மற்றும் அடையாள அட்டையில் இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம், பஞ்சாபில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார் என்ற கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது
- Claimed By : பேஸ்புக் பயனர் சஞ்சு ராவத்
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Email-Id contact@vishvasnews.com