உண்மை சரிபார்ப்பு: நைஜீரியாவில் போராட்டகாரர்களின் பலகைகளில் சுஷாந்த் சிங்கின் புகைப்படம் திருத்தி ஒட்டப்பட்டுள்ளது
இந்த வைரல் பதிவு தவறானது. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் புகைப்படம் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டு நைஜீரியாவில் போராட்டக்காரர்களின் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.
- By Vishvas News
- Updated: October 19, 2020

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் புகைப்படத்துடன் கூடிய பலகைகளை மூன்று நபர்கள் பிடித்திருப்பதை ஒரு வைரல் புகைப்படம் காட்டுகிறது. நைஜீரியாவில் மக்கள் சுஷாந்திற்கு நீதி கேட்டு போராடுகிறார்கள் என்ற கூற்றுடன் இந்த வைரல் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்த இடுகை தவறானது என்பது தெரியவந்துள்ளது. நைஜீரியாவில் மக்கள் ஒரு காவல் படையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும், அவர்களின் பலகைகளில் சுஷாந்தின் புகைப்படம் இல்லை என்பதும், அவரது புகைப்படம் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டு பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது என்பதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
கூற்று
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் புகைப்படங்களுடன் கூடிய பலகைகளை மூன்று போராட்டக்காரர்கள் வைத்திருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த இடுகையில், “நன்றி நைஜீரியா #AshamedOfBollywood மற்றும் #justiceforsushant,” என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இடுகையை இங்கே காணலாம்.
விசாரணை
இந்த புகைப்படத்தின் ஸ்கிரீன்ஷாட்டை கூகுள் தலைகீழ் படத் தேடலைப் பயன்படுத்தி இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில் இந்த புகைப்படத்தை thenationonlineng.net என்ற செய்தி இணையதளத்தில் கண்டோம். அக்டோபர் 15 அன்று வெளியிடப்பட்ட இந்த செய்தியில் இருக்கும் உண்மையான புகைப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் புகைப்படங்கள் பலகைகளில் இல்லை. காவல் படையின் ஒரு பிரிவான SARS ஐ முடிவுக்கு கொண்டுவர வேண்டி நைஜீரியாவில் மக்கள் போராட்டம் செய்ததாக இந்தக் கட்டுரை நமக்கு உறுதிப்படுத்தியது.

அக்டோபர் 13 அன்று cnn.com இல் வெளியிடப்பட்ட செய்திகளிலும் இந்தப் புகைப்படத்தை நம்மால் காண முடிந்தது. இந்த புகைப்படத்திலும் சுஷாந்தின் புகைப்படங்கள் பலகைகளில் இல்லை.
Africa.businessinsider.com இல் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், “பேஸ்டாக், கோரிவைஸ் ஆகிய நிறுவனங்கள் நைஜீரியாவில் #EndSARS ஆர்ப்பாட்டங்களை ஆதரிப்பதற்காக நிதி திரட்டும் பணியில் மற்ற நிறுவனங்களுடன் இணைந்துள்ளன,” என்று கூறப்பட்டுள்ளது.

பிசினஸ் இன்சைடர் ஆப்பிரிக்காவுக்காக இந்த செய்தியை எழுதிய ஆசிரியர் விக்டர் ஒலுவோலை நாங்கள் தொடர்பு கொண்டோம். இது குறித்து பேசிய அவர் “இந்த வைரல் புகைப்படம் திருத்தப்பட்டுள்ளது. காவல் படையினருக்கு எதிராக மட்டுமே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நைஜீரியாவில் இந்திய நடிகர் சுஷாந்திற்காக இதுபோன்ற எந்தவொரு போராட்டமும் நடைபெறவில்லை,” என்று கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த ட்விட்டர் பயனரான Sushant in our hearts forever (SSRF) @Supernova_Sum இன் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு 671 பின்தொடர்பவர்கள் இருப்பது தெரியவந்தது.

निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் புகைப்படம் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டு நைஜீரியாவில் போராட்டக்காரர்களின் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.
- Claim Review : மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் புகைப்படத்துடன் கூடிய பலகைகளை மூன்று நபர்கள் பிடித்திருப்பதை ஒரு வைரல் புகைப்படம் காட்டுகிறது. நைஜீரியாவில் மக்கள் சுஷாந்திற்கு நீதி கேட்டு போராடுகிறார்கள் என்ற கூற்றுடன் இந்த வைரல் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது
- Claimed By : ட்விட்டர் பயனர் @Supernova_Sum
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Telegram 9205270923
-
Email-Id contact@vishvasnews.com