உண்மை சரிபார்ப்பு: 10 ஆண்டுகளாக தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானம் முடியவில்லை என கூறும் இந்த பதிவு தவறானது
இந்த வைரல் பதிவு தவறானது. இந்த வைரல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, கடந்த மாதம் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
- By Vishvas News
- Updated: March 27, 2021

புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயல்பட்டணம் என்ற நகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத் திட்டம் இன்னும் முழுமையடையவில்லை என்று சமூக ஊடகங்களில் ஒரு வைரல் பதிவு கூறுகிறது. ரூ.75 லட்சம் மதிப்பிலான இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பத்து ஆண்டுகளாகியும் இத்திட்டம் முழுமையடையாது இருப்பதாக இப்பதிவு குறிப்பிடுகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் திட்டம் நிறைவடைந்து, கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டதாகக் கூறி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் வைரல் கூற்றுக்களை மறுத்துவிட்டார்.
கூற்று
பேஸ்புக் பயனர் பார்த்திபன் ஜெகநாதன், புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்று எழுதிப்பட்டிருக்கும் கல்வெட்டின் புகைப்படத்தை பகிர்ந்து, “கனிமொழியின் MP நிதி ₹75,00,000ல் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் ஒற்றை அடி உயர சுவர் கூட எழும்பாத ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா கனியே எங்கே அந்த ₹75,00,000,” என்று எழுதியுள்ளார்.
விசாரணை
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக ஆளுங்கட்சி அளித்த வாக்குறுதி குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வரும் நிலையில், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்கட்சியினர் வாக்குறுதியளித்த ரூ.75 லட்சம் மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலையம் திட்டம் குறித்து ஆளுங்கட்சியனர் கேள்வி எழுப்பியிருப்பதை நாங்கள் இந்த வைரல் புகைப்படத்தில் கவனித்தோம்.
வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் குறித்து இணையத்தில் பல தவறான செய்திகள் பரவி வருகின்றன. விஸ்வாஸ் செய்தி முன்னரே இதுபோன்ற சில இடுகைகளை விசாரித்துள்ளது.
இந்த வைரல் கூற்று குறித்து விசாரிக்க நாங்கள் கூகுள் பின்னோக்கிய படத் தேடலைப் பயன்படுத்தி, இந்த புகைப்படத்தை இணையத்தில் தேடியதில், நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியின் ட்வீட் ஒன்றில் அந்த புகைப்படத்தைக் கண்டோம். 21 பிப்ரவரி 2019 அன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் எடுக்கப்பட்ட வேறு சில புகைப்படங்களை,”இன்று (21.02.2019) காயல்பட்டணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 75 லட்சம் நிதி வழங்கிய ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற போது…” என்று கூறி வெளியிட்டிருந்தார்.
2019 இல் நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழா குறித்த செய்திகளையும், வைரல் இடுகைகளில் கூறப்பட்டுள்ளபடி இவ்விழா பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெறவில்லை என்பதையும் நாங்கள் தமிழக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டோம்.
இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் கயல்பட்டணத்தின் பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் சுதாகரை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், “இந்த வைரல் பதிவு தவறானது. ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்தன. இது இந்த ஆண்டு பிப்ரவரியில் திறந்து வைக்கப்பட்டது,” என்று கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியும், 26 பிப்ரவரி அன்று இந்த அடிக்கல்நாட்டு விழாவின் புகைப்படங்களை பகிர்ந்து, “தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தைத் திறந்து வைத்த போது,” என்று எழுதியுள்ளார்.
இந்த இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், பேஸ்புக்கில் அவருக்கு 876 பின்தொடர்பவர்கள் இருப்பதும், அவரது கணக்கு பிப்ரவரி 2013 முதல் செயலில் இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இந்த வைரல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, கடந்த மாதம் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
- Claim Review : கனிமொழியின் MP நிதி ₹75,00,000ல் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் ஒற்றை அடி உயர சுவர் கூட எழும்பாத ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா கனியே எங்கே அந்த ₹75,00,000
- Claimed By : பேஸ்புக் பயனர் பார்த்திபன் ஜெகநாதன்
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Telegram 9205270923
-
Email-Id contact@vishvasnews.com