
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). திமுக வெற்றி பெற்றால் தைப்பூச பண்டிகை நாளுக்கு அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறையை ரத்து செய்வதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறியதாக, தமிழ் மொழி செய்தி சேனலான புதிய தலைமுறையின் பெயரில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படம் கூறுகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தி விசாரணையில் தெரியவந்துள்ளது. புதிய தலைமுறையின் இணைய குழு இந்த கூற்றுக்களை மறுத்துள்ளது.
கூற்று
தமிழ் கடவுள் முருகனை போற்றும் விதமாக தை மாத (ஜனவரி) பௌர்ணமியில் தமிழர்கள் கொண்டாடும் தைப்பூசம் திருவிழா நாளில் அறிவிக்கப்பட்டுள்ள அரசு விடுமுறையை ரத்து செய்வோம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளதாக ஒரு வைரல் புகைப்படம் கூறுகிறது. இந்த வைரல் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இந்துக் கடவுள் முருகனின் போற்றும் விதமாக கொண்டாடப்படும் தைப்பூசம் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதல்வர் பழனிசாமி ஜனவரி 28 அன்று அரசு விடுமுறை அறிவித்தார். இது குறித்த மக்களின் கோரிக்கையை பரிசீலித்த பின்னரே ஜனவரி 28 ஐ பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் பொது விடுமுறை பட்டியலில் தைப்பூசம் சேர்க்கப்படும் என்றும் பிசினஸ் ஸ்டான்ர்டில் ஒரு கட்டுரை தெரிவிக்கிறது.
இந்த அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சியான திமுகவிடமிருந்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், உண்மை சரிபார்ப்புக்காக புதிய தலைமுறையின் இணைய குழுவை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். “இந்த வைரல் செய்தி தவறானது. நாங்கள் இதுபோன்ற கிராஃபிக் பயன்படுத்துவது இல்லை. புகைப்படம் திருத்தப்பட்டுள்ளது,” என்று அக்குழுவின் தலைவர் மனோஜ் பிரபாகர் கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு பேஸ்புக்கில் 3,532 பேர் நண்பர்களாக இருப்பதும், அவர் தமிழ்நாட்டின் அரியலூரைச் சேர்ந்தவர் என்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரஸ் பதிவு தவறானது. தைப்பூச விடுமுறையை ரத்து செய்வது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இந்தக் கருத்தைத் தெரிவிக்கவில்லை.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.