
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வைரல் இடுகை தமிழ்நாட்டின் ஈரோடு ரயில் நிலையத்தின் இரண்டு புகைப்படங்களைக் காட்டுகிறது. அதில் முதல் புகைப்படத்தில் மூன்று மொழிகளில் (தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி) பெயர் பலகைகள் உள்ளன, இரண்டாவது புகைப்படத்தில் இந்தியில் மட்டுமே பெயர்ப்பலகை உள்ளது. இப்புகைப்படம், பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டு இந்தி மொழியில் மாற்றப்பட்டுள்ளது என்ற கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது.
இந்தக் கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னர் ஒன்றாக வைக்கப்பட்டிருந்த மூன்று மொழி பெயர் பலகைகள், தற்போது பிரிக்கப்பட்டு கட்டிடத்தின் வெவ்வேறு பக்கங்களில் வைக்கப்பட்டுள்ளன என்று ரயில்வேத்துறையின் செய்தித் தொடர்பாளர் நமக்குத் தெளிவுபடுத்தினார்.
கூற்று
“ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்த தமிழ் பெயர் பலகை நீக்கப்பட்டு ஹிந்தியில் வைக்கப்பட்டுள்ளது. ஹிந்தியை மூன்றாம் மொழியாக ஏற்காதபோதே தமிழ் தூக்கியடிக்கப்படுகிறது.மூன்றாம் மொழியானால் தமிழ் மொத்தமாய் காணாமல் போய்விடும்,” என்ற கூற்றுடன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இந்த இடுகையை (காப்பகப்படுத்தப்பட்டது) பகிர்வதில் பல பயனர்கள் முரண்பாடு தெரிவித்துள்ளனர்.
விசாரணை
இது குறித்து இணையத்தில் தேடியதில், ஈரோடு ரயில்வே சந்திப்பின் பெயர் பலகைகளில் இந்தி திணிக்கப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் கண்டனம் தெரிவித்தது பற்றி தி இந்துவில் ஒரு கட்டுரையை நாங்கள் கண்டோம். “ரயில்வே அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், சந்திப்பில் உள்ள அனைத்து பெயர் பலகைகளும் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளன என்றார். இருப்பினும், அண்மையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு செய்வதற்கு முன்னதாக, பார்க்கிங் ஸ்டாண்டுகள், நுழைவாயில் மற்றும் அலுவலகங்களில் உள்ள பெயர் பலகைகள் இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புதிதாய் மாற்றப்பட்டன,” என்று அக்கட்டுரை குறிப்பிட்டது.
இதனை மேலும் தெளிவுபடுத்திக் கொள்ள நாங்கள் தெற்கு ரயில்வேயின் சேலம் பிரிவின் செய்தித் தொடர்பாளர் G மரியா மைக்கேலை தொடர்பு கொண்டு பேசினோம். “இந்த வைரல் கூற்று தவறானது. தமிழ் மொழி பெயர்ப்பலகை இந்தி கொண்டு மாற்றப்படவில்லை. ஈரோடு சந்திப்பின் வெளிப்புறத்தில் முன்னர் ஒன்றாக வைக்கப்பட்டிருந்த மூன்று மொழி பலகைகள் தற்போது தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
புதிதாக புதுப்பிக்கப்பட்ட ரயில்வே சந்திப்பின் கட்டிடத்தின் புகைப்படத்தை நாங்கள் தேடியதில், பிப்ரவரி 3 அன்று வெளியிடப்பட்ட ஒரு ட்வீட்டில் அதைக் கண்டோம்.
ரயில்வே சந்திப்பின் வெளிப்புற பகுதிகள் முறையே அதன் வலது மற்றும் இடதுபுறத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவற்றுடன் மையத்தில் தமிழ் மொழி பெயர்ப்பலகை இருப்பதை நம்மால் அதில் காண முடிந்தது.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், இப்பக்கத்திற்கு 4,40,696 பின்தொடர்பவர்கள் இருப்பதும், செப்டம்பர் 2017 முதல் இப்பக்கம் செயலில் இருப்பதும் நமக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. தமிழ்நாட்டின் ஈரோடு ரயில்வே சந்திப்பில் தமிழ் மொழி பெயர்ப்பலகைகள் இந்தி மொழியில் மாற்றப்படவில்லை. தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் உள்ள பெயர்ப்பலகைகள் தனித்தனியாக அக்கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.