
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). வரவிருக்கும் மேற்கு வங்கத் தேர்தலில் AIMIM உடனான தங்கள் கூட்டணியை பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து அறிவித்திருப்பதாகக் கூறி, ஒரு ட்வீட்டின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த வைரல் கூற்று தவறானது என்று தெரியவந்துள்ளது. இதுபோன்ற எந்த ட்வீட்டையும் பாஜக வெளியிடவில்லை என்பதே உண்மை.
கூற்று
பேஸ்புக் பயனரான அனில் சர்மா என்பவர், நவம்பர் 21 அன்று ஒரு ட்வீட்டின் படத்தை பகிர்ந்து, “நீங்கள் வெற்றிபெற எந்த அளவிற்கும் செல்ல வேண்டும், நீங்கள் முதலில் அவர்களுடன் சண்டையிடுவீர்கள், பின்னர் உங்களுக்குள்ளே சண்டையிடுவீர்கள், இவ்வாறு செய்கையில் யாரும் வேலைவாய்ப்பு குறித்து கவனம் செலுத்த மாட்டார்கள்,” என்று எழுதியுள்ளார். பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து வந்ததாகக் கூறப்படும் இந்த ட்வீட், வரவிருக்கும் மேற்கு வங்க மாநில தேர்தலில் AIMIM கட்சியுடனான பாஜகவின் கூட்டணியை அறிவிக்கிறது. இந்த பேஸ்புக் இடுகையை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, ‘அசாதுதின் ஒவைசி மற்றும் பாஜக கூட்டணி’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, இணையத்தில் இது குறித்த செய்திகளை நாங்கள் தேடினோம். அவ்வாறு தேடியதில், அசாதுதின் ஒவைசியின் கட்சியான AIMIM உடன் பாஜக கூட்டணி வைத்திருப்பது குறித்த எந்த செய்தியையும் எங்களால் காண முடியவில்லை. இருப்பினும், மம்தா பானர்ஜியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஒவைசி விருப்பம் தெரிவித்திருப்பது பற்றிய செய்தி கட்டுரைகளை எங்களால் காண முடிந்தது.
நவம்பர் 19 ம் தேதி அன்று ஜாக்ரான்.காம் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை, ஒவைசி, மம்தாவுடன் தேர்தல் கூட்டணி வைப்பது குறித்த தன் விருப்பத்தை முன்வைத்து, அவ்வாறு செய்தால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க திரிணாமுல் காங்கிரஸுக்கு தனது கட்சி உதவும் என்று கூறியிருப்பதை குறிப்பிடுகிறது.
இந்த புகைப்படத்தை சரிபார்க்க பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான BJP4INDIAவை நாங்கள் ஆராய்ந்தோம். அதில், வைரல் புகைப்படத்தில் உள்ளதைப் போன்ற எந்த ட்வீட்டையும் எங்களால் காண முடியவில்லை. ஆனால் நவம்பர் 20 அன்று வெளியிடப்பட்ட ஒரு ட்வீட் ஒன்றில், பாஜக தலைவர் JP நட்டா ஒவைசியின் கட்சியை ஒரு சமூக முறிவு என்று கூறியிருப்பதை எங்களால் காண முடிந்தது.
இந்த கூற்றைச் சரிபார்க்க பாஜக செய்தித் தொடர்பாளர் தாஜிந்தர் பால் சிங் பாகாவை நாங்கள் தொடர்பு கொண்டோம். இது குறித்து நம்மிடத்தில் பேசிய அவர், இந்த வைரல் ட்வீட்டில் எந்த உண்மையும் இல்லை என்று கூறினார்.
இந்த வைரல் புகைப்படத்தைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் தில்லியில் வசிப்பவர் என்பது தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.