
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). டெல்லி எல்லைகளில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டங்களுக்கு மத்தியில், அதானி ரயில்வே மற்றும் ஜியோ உணவு தானிய சாக்குகள் பற்றிய பல தவறான கூற்றுக்கள் சமீபத்தில் இணையம் முழுவதும் வைரலாகி உள்ளன. ரிலையன்ஸ் ஜியோவை புறக்கணிக்க விவசாயிகள் அலைபேசி கோபுரத்துக்கு தீ வைத்தார்கள் என்ற கூற்றுடன் தீ பற்றி எரியும் அலைபேசி கோபுரத்தின் காணொலி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த கூற்று தவறானது என்று விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் தெரியவந்துள்ளது. டெஹ்ராடூனில் நடைபெற்ற ஒரு பழைய சம்பவம் இப்போது தவறான கூற்றுடன் வைரலாகி வருகிறது.
கூற்று
பேஸ்புக் பக்கம் ஒன்று டிசம்பர் 30 அன்று விவசாயிகள் ரிலையன்ஸ் ஜியோவின் அலைபேசி கோபுரத்தை எரித்ததாகக் கூறி ஒரு வீடியோவைப் பதிவேற்றி உள்ளது. இந்த பேஸ்புக் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
‘தோழர் அன்பு’ என்கிற மற்றொரு பேஸ்புக் பயனரும், இந்த காணொளியைப் பகிர்ந்து, “விவசாயிகளின் கோபத்தில் அம்பானியின் ஜியோ டவர் பற்றியெரிகிறது,” என்று எழுதியுள்ளார்.
விசாரணை
வீடியோவை கவனமாகக் கவனித்ததில், டிக் டோக் என இடது மேல் மூலையில் எழுதப்பபட்டுள்ளதை அடையாளம் கண்டோம். நாட்டில் விவசாயிகள் இயக்கத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே டிக்டோக் தடைசெய்யப்பட்டுள்ளது. வைரல் வீடியோ பழையது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடிந்தது.
இந்தக் காணொலியை இன்விட் கருவியில் பதிவேற்றி, அதன் கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்து, பின்பு கூகுள் பின்னோக்கிய படக் கருவியைப் பயன்படுத்தி அவற்றை இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், அமர் உஜாலா இணையதளத்தில், இந்த புகைப்படங்களோடு 28 ஜூன் 2017 அன்று வெளியிடப்பட்டிருந்த செய்தி கட்டுரை, டெஹ்ராடூனில் ஒரு குடியிருப்பு வீட்டின் கூரையில் இருந்த அலைபேசி கோபுரம் திடீரென தீப்பிடித்தது எரிந்தது தொடர்பான செய்தியை நமக்கு உறுதிப்படுத்தியது.
29 ஜூன் 2017 அன்று பதிவேற்றப்பட்ட நியூஸ்18 ஒரு செய்தி குறிப்பிலும் இந்த காணொலியை நம்மால் காண முடிந்தது.
மேலும் வைரல் காணொலிக்கும் நியூஸ் 18 வெளியிட்ட அசல் காணொலிக்கும் இடையே ஒற்றுமை இருப்பதை நம்மால் காண முடிந்தது.
இது குறித்த உண்மை சரிபார்ப்பிற்காக டேராடூனில் உள்ள டையினிக் ஜாக்ரானின் இணைய மாநில செய்திகளின் பொறுப்பாளாரான சுனில் நேகியை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். ஜூன் 2017 இல் டைனிக் ஜாக்ரான் வெளியிட்ட இச்சம்பவம் குறித்த கட்டுரையின் செய்தி கிளிப்பிங் ஒன்றை எங்களுடன் பகிர்ந்த அவர், இந்த வைரல் காணொலியில் உள்ள சம்பவம் மிகவும் பழமையானது என்பதை அவர் நமக்கு உறுதிப்படுத்தினார். மேலும் “அங்கிதாபுரம் காலனியில் ஒரு குடியிருப்பு வீட்டின் கூரையில் ஒரு மொபைல் கோபுரம் தற்செயலாக தீப்பிடித்தது,” என்றும் அவர் கூறினார்.
இந்த வைரல் இடுகையைப் பகிர்ந்த பேஸ்புக் பக்கத்தினை ஆராய்ந்ததில், இது டிசம்பர் 15 அன்று சமீபத்தில் உருவாக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இந்த அலைபேசி கோபுரம் பற்றி எரியும் பழைய காணொலி தவறான கூற்றுடன் வைரலாகி உள்ளது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.