
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). கேரளாவின் மூணாரில் உள்ள பிரஷ்வுட் தடுப்பணையின் கட்டுமான திட்டத்தில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக ஒருவர் குற்றம் சாட்டும் இந்தக் காணொலி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது
விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்தக் கூற்று தெளிவற்றது என்று தெரியவந்தது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் (MGNREGS) கீழ் சுமார் 80 பிரஷ்வுட் தடுப்பணைகள் 4,40,000 ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன என்பதே உண்மையாகும்.
கூற்று
கேரளாவின் மூணாரில் உள்ள நடயர் கிராம பஞ்சாயத்தில் உள்ள பிரஷ்வுட் தடுப்பணையைக் காட்டும் ஒரு நபரின் காணொலி, இந்தத் தடுப்பணையினை நான்கு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் செலவில் அரசாங்கம் கட்டியுள்ளது என்ற விமர்சனத்துடன் வைரலாகி வருகிறது. இந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, முதலில் நாங்கள் இது பற்றி இணையத்தில் தேடினோம். அவ்வாறு தேடியதில், இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையையும் எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. கூகுள் பின்னோக்கிய படத் தேடலைப் பயன்படுத்தி, இந்தக் காணொலியின் மூலத்தைத் தேடியதில், ஒரு மலையாள செய்தி வலைத்தளத்தால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையை நாங்கள் கண்டறிந்தோம். அதில் இந்தத் திட்டத்தால் பல்வேறு பகுதிகளில் 12 தடுப்பணைகளை கட்டுப்பட்டுவது குறித்தும், எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டத்தின் கீழ் குடிநீர் சேமிப்பு செய்வது குறித்தும் கூறப்பட்டிருந்தது. மேலும் அதில் தடுப்பணை கட்ட ரூ .4.5 லட்சம் செலவழிக்கப்பட்டது என்ற கூற்று முற்றிலும் தவறானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் உண்மை சரிபார்ப்புக்காக நாங்கள் MGNREGS திட்ட இயக்குநர் டாக்டர் திவ்யா S.அய்யரை தொடர்பு கொண்டு பேசினோம். இது குறித்து பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள ஒரு விழிப்புணர்வு இடுகையை நம்முடன் பகிர்ந்துகொண்ட அவர், இந்தக் கூற்றுக்களை மறுத்தார். இந்த இடுகையில், மூணார் கிராம பஞ்சாயத்தில் சுமார் 80 தடுப்பணைகள் கட்ட எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் கீழ் ஒதுக்கப்பட்ட மொத்த மதிப்பீடு ரூ .4,40,000 என்று கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த திட்டத்திற்கு 1.75 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது, அதில் 1.73 லட்சம் தொழிலாளர்களுக்கான சம்பளத்திற்காக 596 நாட்கள் செலவிடப்பட்டது, எனவே இந்த காணொலி தெளிவற்றது என்று அவர் கூறினார்.
இந்த காணொலியைப் பகிர்ந்த ட்விட்டர் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவருக்கு 5,122 பின்தொடர்பவர்கள் இருப்பதும், ஆகஸ்ட் 2009 முதல் அவரது கணக்கு செயலில் இருப்பதும் நமக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் காணொலி தெளிவற்றது. இந்தக் காணொலியில் கூறப்பட்டிருப்பது 80 தடுப்பணைகளின் மொத்த மதிப்பீடு.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.