உண்மை சரிபார்ப்பு: இது ஒரு புகைப்படம், ஓவியம் அல்ல.
எங்கள் புலன்விசாரணையில் இந்தக் க்ளைம் போலி என்று கண்டுபிடித்தோம். இந்த வைரல் படம் உண்மையில் ஒரு புகைப்படம்தான், ஓவியம் அல்ல.
- By Vishvas News
- Updated: March 31, 2022

புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்) – ஒரு பெண் புடவை அணிந்துகொண்டு உட்கார்ந்திருப்பது போல் ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. அந்தப் படம் கேமிராவின் மூலம் எடுக்கப்பட்டது அல்ல அது ஒரு ஓவியம் வரைபவரால் வரையப்பட்ட ஒரு ஓவியம் என்ற க்ளைமுடன் பதிவிடப்படுகிறது. அந்தக் க்ளைமில் உண்மை இல்லை என்று விஷ்வாஸ் நியூஸ் தன புலன்விசாரணையில் கண்டுபிடித்தது. உண்மையில் அது ஒரு புகைப்படம்தான், ஓவியம் அல்ல.
வைரல் பதிவில் உள்ளது என்ன?
ஃபேஸ்புக் பக்கம் I7Info இந்தப் பதிவை இந்தத் தலைப்புடன் பகிர்ந்தது. “இது ஒரு புகைப்படம் அல்ல, ஒரு ஓவியம். இந்திய ஓவியத்தின் திறமை இது.” பதிவு விவரம் இவ்வாறு இருந்தது “கலைஞருக்கு மரியாதை”
இந்தப் பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.
புலன் விசாரணை
எங்கள் புலன்விசாரணையை தொடங்க, நாங்கள் இந்தப் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜில் தேடினோம். அக்டோபர் 13, 2018 அன்று ஸ்நேகலதா வசைகர் என்ற பெயருள்ள ஒரு மராத்தி நடிகையின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்தப்படம் அப்லோட் செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தோம். ப்ரித்விராஜ் பாபர் என்ற புகைப்படக் கலைஞர் இந்தப் படத்தை எடுத்ததாக அவர் கூறியிருக்கிறார்.
ப்ரித்விராஜ் பாபரை முக்கிய வார்த்தை உபயோகித்து நாங்கள் தேடி அவருடைய இன்ஸ்டாக்ராம கணக்கைக் கண்டுபிடித்தோம். தேடியபோது இந்தப்படம் ப்ரித்விராஜ் பாபரின் இன்ஸ்டாக்ராம் கணக்கில் 13 அக்டோபர், 2018 அன்று அப்லோட் செய்யப்பட்டது என்று கண்டுபிடித்தோம்.
இது குறித்து ப்ரித்விராஜ் பாபருடன் தொடர்பு கொண்டோம். எங்களுடன் பேசிய போது, அவர் அந்த வைரல் க்ளைம் போலி என்றும், உண்மையில் அந்தப்படம் அவர் எடுத்ததுதான் என்றும் கூறினார்.
இந்த ஃபோட்டோஷூட்டில் உள்ள மற்ற புகைப்படங்களை இங்கே க்ளிக் செய்து பார்க்கலாம்.

இந்த போலி பதிவை பகிர்ந்த பக்கமான I7Info-வை சமூக ஸ்கேன் செய்தபோது அந்தப் பக்கத்துக்கு 210,835 பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
निष्कर्ष: எங்கள் புலன்விசாரணையில் இந்தக் க்ளைம் போலி என்று கண்டுபிடித்தோம். இந்த வைரல் படம் உண்மையில் ஒரு புகைப்படம்தான், ஓவியம் அல்ல.
- Claim Review : எங்கள் புலன்விசாரணையில் இந்தக் க்ளைம் போலி என்று கண்டுபிடித்தோம். இந்த வைரல் படம் உண்மையில் ஒரு புகைப்படம்தான், ஓவியம் அல்ல.
- Claimed By : I7Info
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Email-Id contact@vishvasnews.com