உண்மை சரிபார்ப்பு: சமூக இடைவெளி அவசியமானது; ஆனால் 14-மணிநேர இடைவெளியானது கோவிட்-19 வைரஸைக் கொல்லும் என்று கூறும் வைரலான பதிவு பொய்யானது
சமூக இடைவெளி அவசியமானது; ஆனால் 14-மணிநேர இடைவெளியானது கோவிட்-19 வைரஸைக் கொல்லும் என்று கூறும் வைரலான பதிவு பொய்யானது
- By Vishvas News
- Updated: April 3, 2020

2020 மார்ச் 19 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா வைரஸ் பரவல் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, 2020 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு தழுவிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘ஜனதா ஊரடங்கு உத்தரவை’ அறிவித்தார். ஜனதா ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட உடனேயே, ஜனதா ஊரடங்கு உத்தரவுக்குப் பின்னால் உள்ள கருத்தையும் நியாயத்தையும் விவரிக்கும் பல்வேறு பதிவுகளால் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிந்தன. கொரோனா வைரஸின் ஆயுள் காலம் 8 – 12 மணி நேரம், ஜனதா ஊரடங்கு உத்தரவு 14 மணிநேரம் என்று கூறப்பட்ட ஒரு பதிவானது சமூக ஊடகங்களில் வைரலானது. 12 மணிநேரத்திற்கு வைரஸ் மனித உடலை அண்டாது, இது வைரஸைக் கொல்லும் என்றும் கூறுப்படுகிறது. இந்த வைரலான பதிவு பொய்யானது என்பதை விஸ்வாஸ் நியூஸ் விசாரித்து, கண்டறிந்துள்ளது.
கூற்று
பஹல்தன்யா.16 என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட வைரலான பதிவு பின்வருமாறு: “ஜனதா ஊடரங்கு உத்தரவிற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால்…ஒரு இடத்தில் கொரோனா வைரஸின் ஆயுள் காலம் 8 – 12 மணிநேரம் மற்றும் ஜனதா ஊரடங்கு உத்தரவு 14 மணிநேரம் என்பதனால்…. 12மணிநேரத்திற்கு வைரஸ் மனித உடலை அண்டாது, இதனால் வைரஸ் கொல்லப்படும்.” காப்பகத்தில் சேமிக்கப்பட்ட பதிவை இங்கே பார்க்கலாம்.
விசாரணை
விசாரணையின் போது, விஸ்வாஸ் நியூஸ்க்கு தி நியூ இங்கிலாந்து மருத்துவ இதழ் நடத்திய ஒரு ஆராய்ச்சி கிடைத்தது. ஆய்வின்படி, வைரஸ் இருக்கும் மேற்பரப்பைப் பொறுத்து, அது ஒரு சில மணிநேரம் அல்லது 2-3 நாட்களுக்கு உயிர் வாழலாம். மனிதர்களுடைய மேல் மற்றும் கீழ் சுவாசக் குழாயிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் காணப்பட்டதைப் போன்ற சூழலை உருவாக்கி, தெளிப்பானின் உதவியுடன் காற்றில் வைரஸை தெளித்து அவர்கள் இந்த ஆய்வை நடத்தினர். காற்றில் குறைந்தது 3 மணிநேரத்திற்குப் பிறகும், தாமிரத்தின் மீது 4 மணிநேரம் வரையிலும், அட்டைப் பெட்டியின் மீது 24 மணிநேரம் வரையிலும் மற்றும் பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலின் மீது 2-3 நாட்கள் வரையிலும் இதைக் கண்டறியலாம் என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

ஆய்வின்படி, கொரோனா வைரஸ் காற்று வழியாகவும் பரவலாம்.
உலக சுகாதார அமைப்பின் (WHO)படி, “கோவிட்-19 வைரஸை உண்டாக்கும் வைரஸ் பொருட்களின் மீது எவ்வளவு காலம் உயிர்வாழும் என்று உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இது மற்ற கொரோனா வைரஸ்களைப் போலவே செயல்படுவதாகத் தெரிகிறது. கொரோனா வைரஸ்கள் (கோவிட்-19 வைரஸ் பற்றிய ஆரம்ப தகவல்கள் உட்பட) பொருட்கள் மீது சில மணிநேரங்கள் அல்லது பல நாட்கள் வரை தொடர்ந்து வாழலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது வெவ்வேறு நிலைகளின் (எ.கா. மேற்பரப்பின் வகை, வெப்பநிலை அல்லது சுற்றுச்சூழலின் ஈரப்பதம்) அடிப்படையில் மாறுபடலாம்.
ஒரு பொருளின் மேற்பரப்பானது நோய்த் தொற்றினால் பாதிக்கப்படலாம் என்று நீங்கள் கருதினால், வைரஸைக் கொல்லவும் உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்கவும் சாதாரண கிருமிநாசினியை பயன்படுத்தி அதை சுத்தம் செய்யுங்கள். ஆல்கஹால் சார்ந்த கை கழுவும் திரவத்தைக் கொண்டு உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கழுவுங்கள். உங்கள் கண்கள், வாய் அல்லது மூக்கைத் தொடுவதைத் தவிர்க்கவும்.”

2020 மார்ச் 22 அன்று நடக்கும் ஜனதா ஊரடங்கு உத்தரவு மக்களுக்கு இடையிலான தொடர்பைக் குறைக்கும், இது நோய் சமூகத்தில் பரவுவதைத் தவிர்க்க ஓரளவிற்கு உதவும்.
இந்த வைரலான கூற்று தொடர்பாக விஸ்வாஸ் நியூஸ் இந்திரபிரஸ்தா அப்பல்லோவில் பணிபுரியும் டாக்டர் சுதீப் கண்ணாவுடன் பேசியது. அவர் கூறியதாவது: “ஒரு பொருளின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் உயிர்வாழ்வது பற்றி தெரியவில்லை. இந்த வைரஸ் 8-12 மணிநேரத்தில் இறந்துவிடும் என்று சொல்வது தவறானது.”
WHO அதிகாரியின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் பொருட்களின் மீது சில மணிநேரங்கள் அல்லது பல நாட்கள் வரை உயிர்வாழும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது வெவ்வேறு நிலைகளில் மாறுபடலாம்.
“கைகளை அடிக்கடி கழுவுவதன் அவசியத்தை நீங்கள் வலியுறுத்த வேண்டும், மேலும் கொரோனா வைரஸிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள முடிந்தவரை முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று யுனிசெஃபின் சுகாதார நிபுணர் டாக்டர் கனுப்ரியா சின்கால் கூறினார் .
निष्कर्ष: சமூக இடைவெளி அவசியமானது; ஆனால் 14-மணிநேர இடைவெளியானது கோவிட்-19 வைரஸைக் கொல்லும் என்று கூறும் வைரலான பதிவு பொய்யானது
- Claim Review : ஒரு இடத்தில் கொரோனா வைரஸின் ஆயுள் காலம் 8 - 12 மணிநேரம் மற்றும் ஜனதா ஊரடங்கு உத்தரவு 14 மணிநேரம் என்பதனால்…. 12 மணிநேரத்திற்கு வைரஸ் மனித உடலை அண்டாது, இதனால் வைரஸ் கொல்லப்படும்
- Claimed By : bhallatanya.16
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Email-Id contact@vishvasnews.com