X
X

Fact Check: சவாய் மாதோபூரில் வெள்ளம் ஏற்பட்டதைக் காட்டும் வைரல் காணொளி AI-உருவாக்கப்பட்டது.

புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்). வெள்ளத்தில் மூழ்கிய தெருக்களைக் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பகிரும் பயனர்கள், இது ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ள நிலைமையை சித்தரிப்பதாகக் கூறுகின்றனர். 

விஷ்வாஸ் நியூஸ், தனது விசாரணையில், இந்தக் கூற்று பொய் என்பதைக் கண்டறிந்தது. இந்த காணொளி உண்மையில் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

வைரலாவது என்ன?

“இயற்கையின் சீற்றத்தால் ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் இயற்கை அன்னையிடம் கருணை கோருகிறார்கள்” என்ற  தலைப்புடன், ஆகஸ்ட் 25, 2025 அன்று ‘ BP பப்ளிக் நியூஸ் ‘ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வைரலான வீடியோவை ( ஆர்க்கைவ்டு லின்க்)  பகிர்ந்துள்ளார்.

விசாரணை

வைரலான பதிவை ஆய்வு செய்ய, நாங்கள் வீடியோவை உன்னிப்பாக ஆராய்ந்தோம், அதில் பல முரண்பாடுகள் இருப்பதைக் கவனித்தோம். உதாரணமாக, இந்த வீடியோ ஏஐ-யால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பும் விதமாக வீடியோவில் காணப்படும் ஆடுகளுக்கு இரண்டு தலைகள் இருந்தன.

மேலும் சரிபார்க்க, ஏஐ கண்டறிதல் கருவிகளைப் பயன்படுத்தி வீடியோவை பகுப்பாய்வு செய்ய முடிவு செய்தோம். ஹைவ் மாடரேஷன் கருவி, வீடியோ ஏஐ-உருவாக்கம் என்பதற்கான 99.9% நிகழ்தகவைக் காட்டியது.

மற்றொரு ஏஐ கண்டறிதல் கருவியான கேன்டிலக்ஸ் (Cantilux), ஏஐ உருவாக்கம் என்பதற்கான 80% க்கும் அதிகமான நிகழ்தகவைக் காட்டியது.

மேலும் நாங்கள், ஏஐ மற்றும் புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் நிபுணரான அசார் மச்வேயிடம் நாங்கள் பேசினோம், அவர் இந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார்.

மாதோபூரில் வெள்ள நிலைமை குறித்த பல செய்தி அறிக்கைகளைக் கண்டோம்.

டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தி, “ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் இடைவிடாத மழையால் சுர்வால் அணை நிரம்பி வழிந்ததால் ஒரு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது, இதனால் ஞாயிற்றுக்கிழமை பல கிராமங்களில் நிலச்சரிவுகள் மற்றும் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு பெரிய பகுதி நிலம் இடிந்து விழுந்தது, இதனால் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டு, அதற்கு செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டன. சுர்வால், தனோலி, கோகோர், ஜடவதா, ஷேஷா மற்றும் மச்சிபுரா உள்ளிட்ட முழு குடியிருப்புகளும் இப்போது நீரில் மூழ்கியுள்ளன, நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.” என்று கூறுகிறது.

இந்த வைரல் காணொளியைப் பகிர்ந்த ‘பிபி பப்ளிக் நியூஸ்’ என்ற பேஸ்புக் பயனருக்கு 10000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

முடிவு: ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் இருந்து பகிரப்படும் வைரல் காணொளி, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதை விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது.

  • Claim Review : சவாய் மாதோபூரில் வெள்ள நிலைமையைக் காட்டும் காணொளி
  • Claimed By : இன்ஸ்டாகிராம் பயனர் 'பிபி பப்ளிக் நியூஸ்'
  • Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!

Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.

டேக்குகள்

Post your suggestion

No more pages to load

தொடர்புடைய கட்டுரைகள்

Next pageNext pageNext page

Post saved! You can read it later