
புது தில்லி (விஸ்வாஸ் செய்தி). பைக் திருட்டில் ஈடுபட்டதற்காக மூன்று பாஜக உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகக் கூறி ஒரு தமிழ் மொழி செய்தி சேனலின் பெயரில் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்த விஸ்வாஸ் செய்தியின் விசாரணையில் இந்த கூற்று தவறானது என்பது தெரியவந்தது. தலைமை விசாரணை அதிகாரி இந்த கூற்றுக்களை மறுத்துவிட்டார்.
கூற்று
ரூ.15 லட்சம் மதிப்புள்ள 10 பைக்குகளை திருடிய மூன்று பாஜக கட்சி உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்ததாக, திருடப்பட்ட இரு சக்கர வாகனங்களின் புகைப்படத்துடன் கூடிய ஒரு செய்தி புகைப்படம் கூறுகிறது.
விசாரணை
இது குறித்து விசாரிக்க, நாங்கள் கூகுள் பின்னோக்கிய பட தேடல் கருவியைப் பயன்படுத்தி இணையத்தில் தேடியதில், இந்தச் செய்தி புகைப்படம் நியூஸ் 7 சேனலின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் 3 அக்டோபர் 2020 அன்று வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம்.
பாஜக கட்சி உறுப்பினர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக அந்த அசல் செய்தி புகைப்படத்தில் குறிப்பிடப்படவில்லை என்பதை நம்மால் காண முடிந்தது.
சென்னை நகரின் பல இடங்களிலும் பைக்குகளை திருடியதற்காக மூன்று நபர்களை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களின் பெயர் மற்றும் ஊர்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினத்தைச் சேர்ந்த ஏ. முகமது ஷாபி, 27; கேரளாவைச் சேர்ந்த டி. சிபி, 23; விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அமீர்ஜன், 36. அவர்களிடமிருந்து 15 லட்சம் மதிப்பிலான 10 பைக்குகள் மீட்கப்பட்டுள்ளன ”என்று இந்து நாளிதழின் ஒரு கட்டுரை தெரிவிக்கிறது.
இதன் உண்மை சரிபார்ப்பிற்காக நாங்கள் நியூஸ் 7 இணைய குழுவைச் சேர்ந்த நிருபனைத் தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், “யாரோ எங்கள் செய்தி புகைப்படத்தை எடிட் செய்துள்ளனர். இப்பதிவு தவறானது” என்று கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதியும், மே 2 ம் தேதியும் முடிவுகளும் வெளியாக உள்ள நிலையில், இணையத்தில் பல தவறான பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. விஸ்வாஸ் செய்தி முன்னரே இதுபோன்ற பல கூற்றுக்களை உண்மை சரிபார்ப்பு செய்துள்ளது.
இந்த இடுகையைப் பகிர்ந்த பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், அவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், அக்டோபர் 2013 முதல் அவர் பேஸ்புக்கில் செயல்பட்டு வருவதும் எங்களுக்குத் தெரியவந்தது.
निष्कर्ष: இந்த வைரல் பதிவு தவறானது. இந்தச் செய்தி புகைப்படம் எடிட் செய்யப்பட்டு, தவறான கூற்றுடன் பகிரப்பட்டுள்ளது.
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.