உண்மைச் சரிபார்ப்பு: இந்த உடையில் இருக்கும் பிரதமர் மோடியின் படம் போலியானது, AI கருவிகளால் உருவாக்கப்பட்டது
- By Vishvas News
- Updated: April 30, 2023

புது தில்லி (விஸ்வாஸ் நியூஸ்): செயற்கை நுண்ணறிவின் [Artificial Intelligence (AI)] கண்டுபிடிப்பு மற்றும் தளங்களில் அதன் பயன்பாடு அபரிமிதமாக உயர்ந்தது முதல், மக்கள் பல்வேறு வித்தியாசமான விஷயங்களுக்கும் AI-ஐப் பயன்படுத்துகின்றனர். தற்போதைய போக்கு (Trend) என்பது மாற்றி அமைக்கப்பட்ட போலிகளை உருவாக்க AI-ஐப் பயன்படுத்துவதாகும். இணைய பயனர்கள் கற்பனையான படங்களை உருவாக்கி அவைகளை சமூக ஊடக தளங்களில் பகிர்ந்து கொள்ள AI-ஐப் பயன்படுத்துகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி வித்தியாசமான உடையில் காணப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில், பிரதமர் மோடியின் படம் போலியானது என்றும் AI கருவியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்றும் கண்டறிந்துள்ளது. முன்னதாகவும், செயற்கை நுண்ணறிவியின் (AI) உதவியுடன் உருவாக்கப்பட்ட பிரதமர் மோடியின் படங்கள் இணையத்தில் வைரலானது. அந்தப் படங்களின் உண்மைச் சரிபார்ப்பு அறிக்கைகளை விஸ்வாஸ் நியூஸ் இணையதளத்தில் காணலாம்.
உரிமைகோரல்:
வைரலான படத்தைப் (காப்பக இணைப்பு) பகிர்ந்துக் கொண்டு, சமூக ஊடகப் பயனாளர் ‘சையத் அன்சார் ஹுசைன்’, “எங்கள் நேசத்திற்குரிய பிரதமரைப் பற்றி நான் இதுவரை படித்ததில் இதுவே சிறந்த வரிகள்” என்று எழுதினார்.”
பல மற்ற பயனர்களும் கூட இதே கூற்றுடன் இந்த படத்தை பகிர்ந்துள்ளனர்.
விசாரணை:
விஸ்வாஸ் நியூஸ் முன்னதாகவும் செயற்கை நுண்ணறிவியால் உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் படங்களையும் ஆய்வு செய்தது, அந்த ஆய்வின்போது ‘Sahixd‘ என்ற இன்ஸ்டாகிராம் பயனரின் சுயவிவரத்தை நாங்கள் கண்டோம். அவரது சுயவிவர பக்கத்தில் செயற்கை நுண்ணறிவியால் உருவாக்கிய பல்வேறு ஆளுமைகளின் பல படங்களை நாங்கள் கண்டோம். அவரது சுயவிவர பக்கத்தில் பிரதமர் மோடியின் சமீபத்திய புகைப்படமும் காணப்பட்டது. அவர் ஏப்ரல் 3 ஆம் தேதி இந்த படத்தைப் பகிர்ந்துக் கொண்டு குறிப்பிட்டதென்னவெனில், இது மெட் காலாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடியின் செயற்கை நுண்ணறிவியால் உருவாக்கப்பட்ட படம் என்று கூறினார்.

இந்த இன்ஸ்டாகிராம் பயனர் செயற்கை நுண்ணறிவியால் உருவாக்கிய மற்றும் பல தலைவர்களின் படங்களையும் வெளியிட்டியிருந்தார். இருப்பினும், பிரதமர் மோடியின் படங்கள் உட்பட இந்த படங்கள் செயற்கை நுண்ணறிவியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட கற்பனை படங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஷாஹித் தனது சுயவிவரத்தில் தன்னை ஒரு செயற்கை நுண்ணறிவியின் (AI) ஆதரவாளர் என்றும், டிஜிட்டல் படைப்பாளர் என்றும் விளக்கியிருந்தார்.
ஆழமான கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிபுணர் அபிஜித் பராஷரை வைரலான AI-படங்கள் தொடர்பாக நாங்கள் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், “செயற்கை நுண்ணறிவியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட படங்களில் சில வடிவங்கள் உள்ளன, அதன் உதவியுடன் அவற்றை எளிதாக அடையாளம் காண முடியும். இந்தப் படமும் செயற்கை நுண்ணறிவி கருவியின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது”.
இதற்கு முன்பும், செயற்கை நுண்ணறிவி கருவியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட பிரதமரின் இதே போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டதை சித்தரிக்கும் புகைப்படங்கள் வைரலானது. AI கருவிகள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த படங்கள் போலியானவை என விஸ்வாஸ் நியூஸ் கண்டறிந்தது.
AI கருவியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் போலி படத்தைப் பகிர்ந்த பயனரை ட்விட்டரில் சுமார் 1,200 பேர் பின்தொடர்கின்றனர்.
முடிவுரை: பிரதமர் நரேந்திர மோடியின் வித்தியாசமான உடையில் இருக்கும் படம் போலியானது மற்றும் AI கருவிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
- Claim Review : ட்விட்டர் பயனர்: சையத் அன்சார் ஹுசைன்
- Claimed By : பிரதமர் நரேந்திர மோடி ஒரு வித்தியாசமான உடையில் காணப்பட்டார்
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Email-Id contact@vishvasnews.com