உண்மை சரிபார்ப்பு: பள்ளியின் இந்த வைரல் படம் உபி சம்பந்தப்பட்டது அல்ல, அது பாகிஸ்தானுடையது.
உபியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் பெயரில் வந்த அந்த வைரல் பதிவு பொய்யானது என்று விஷ்வாஸ் நியூஸ் தன புலன் விசாரணையின் மூலம் கண்டிபிடித்தது. அதன் உண்மையான படம் பாகிஸ்தானில் உள்ள ஒரு அரசுப் பள்ளியுடையது. கடந்த சில வருடங்களாக, இந்தப் படம் பல்வேறு க்ளைம்களுடனும் தகவல்களுடனும் வைரலில் உள்ளது.
- By Vishvas News
- Updated: July 15, 2022

புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்): குழந்தைகள் மண்ணில் படித்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. அது உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளி என்று க்ளைம் செய்யப்படுகிறது. விஷ்வாஸ் நியூஸின் புலன் விசாரணையில் இந்தக் க்ளைம் பொய் என்று கண்டு பிடிக்கப்பட்டது. இந்தப் படம் பாகிஸ்தானில் உள்ள ஒரு அரசுப் பள்ளியினுடையது. இந்தப் படம், பல்வேறு க்ளைம்களுடன் இணையதளத்தில் கடந்த சில வருடங்களாக வைரலில் இருக்கிறது.
க்ளைம்
ஃபேஸ்புக் பயனர் “ஆர்த்தி சிங்” இந்தப் பதிவை பகிர்ந்தார். அதன் விவரிப்பு இவ்வாறு இருந்தது, “3200 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ஒரு சிலை இருக்கும் ஒரு நாட்டில் அரசுப் பள்ளிகளின் நிலை இதுதான். யார் மனதில் மனிதநேயம் இருக்கிறதோ அவர்கள் இந்தப் படத்தைப் பாருங்கள், பிறகு சொல்லுங்கள், எது முக்கியம், பள்ளியா அல்லது 3200 கோடியில் ஒரு சிலையா .#ShamefulUttar Pradesh.’
இந்தப் பதிவின் ஆவணப்படுத்தப்பட்ட பதிப்பு இங்கே காணக் கிடைக்கும்.
புலன் விசாரணை:
கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலின் உதவியுடன் நாங்கள் அந்த வைரல் படத்தைத் தேடினோம். இந்தப் படத்தை நாங்கள் பல சமூக ஊடக ஹேண்டில்களில் கண்டுபிடித்தோம். அதில் மிகப் பழையது 2015-இல் அப்லோட் செய்யப்பட்டிருந்தது. SKY KINGS என்ற பாகிஸ்தானி ட்விட்டர் ஹேண்டில் இந்தப்படத்தை அதன் கணக்கில் 10 ஜனவரி 2015 அன்று அப்லோட் செய்திருந்தது.
இந்தப் படத்தைப் பற்றி நாங்கள் மேலும் தேடி இந்த வைரல் படத்துக்கு தொடர்புள்ள ஒரு அறிக்கையை பாகிஸ்தானி செய்தி வலைதளமான Siasat.pk என்பதில் கண்டு பிடித்தோம். அது 10 ஜூன் 2015 அன்று பிரசுரிக்கப் பட்டிருந்தது. அதில் உள்ள விவரப்படி இந்த வைரல் படம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் இருந்து வந்தது. முழு அறிக்கையையும் இங்கே படிக்கலாம்.

மேல் விவரங்களுக்காக, விஷ்வாஸ் நியூஸ் பிஜேபி உபி செய்தித் தொடர்பாளர் அவ்நீஷ் தியாகி-யோடு பேசினோம். அந்த வைரல் பதிவை அவரோடு பகிர்ந்து கொண்டோம். அந்த வைரல் பதிவை பொய் என்று அவர் கூறினார். இந்தப் படம் உத்தர பிரதேசத்துக்குத் தொடர்பானது அல்ல, அந்தப் படம் ஒரு பாகிஸ்தான் பள்ளிக்கு உரியது.
அதன் புலன் விசாரணையின் கடைசிக் கட்டத்தில், விஷ்வாஸ் நியூஸ் இந்த வைரல் பதிவைப் பகிர்ந்தவரின் தற்குறிப்பு மீது ஒரு பின்புல சரிபார்ப்பு செய்தது.அந்தப் பயனர் உ.பி., லக்னௌவில் வசிப்பவர் என்று கண்டு பிடித்தோம். அவர் கணக்கில் அவரை 16 ஆயிரம் பேருக்கு மேல் தொடர்கிறார்கள்.
निष्कर्ष: உபியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் பெயரில் வந்த அந்த வைரல் பதிவு பொய்யானது என்று விஷ்வாஸ் நியூஸ் தன புலன் விசாரணையின் மூலம் கண்டிபிடித்தது. அதன் உண்மையான படம் பாகிஸ்தானில் உள்ள ஒரு அரசுப் பள்ளியுடையது. கடந்த சில வருடங்களாக, இந்தப் படம் பல்வேறு க்ளைம்களுடனும் தகவல்களுடனும் வைரலில் உள்ளது.
- Claim Review : “3200 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ஒரு சிலை இருக்கும் ஒரு நாட்டில் அரசுப் பள்ளிகளின் நிலை இதுதான். யார் மனதில் மனிதநேயம் இருக்கிறதோ அவர்கள் இந்தப் படத்தைப் பாருங்கள், பிறகு சொல்லுங்கள், எது முக்கியம், பள்ளியா அல்லது 3200 கோடியில் ஒரு சிலையா .#ShamefulUttar Pradesh.
- Claimed By : ஆர்த்தி சிங்
- Fact Check : False

Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
-
Whatsapp 9205270923
-
Email-Id contact@vishvasnews.com